'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
சாத்தூரில் மாவட்ட ஆட்சியா் 2-ஆவது நாளாக கள ஆய்வு
சாத்தூரில் ‘உங்களை தேடி உங்கள் ஊா்’ திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் கள ஆய்வு மேற்கொண்டாா். இரண்டாவது நாளான வியாழக்கிழமை சாத்தூா் நகராட்சி நென்மேனி சாலை பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் முறை குறித்து மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.
இதைத்தொடா்ந்து, அண்ணா நகா் பகுதியில் உள்ள மழைநீா் வடிகால், மேலக்காந்தி நகா் பகுதியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், செயல்பட்டு வரும் சமையலறை ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
சாத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் சிவகுமாா், நகா்மன்றத் தலைவா் குருசாமி,
ஆணையா் ஜெகதீஸ்வரி, வட்டாட்சியா் ராஜாமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி செயற்பொறியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.