செய்திகள் :

சாந்தோம் சாலையில் இன்று முதல் மீண்டும் இருவழிப் போக்குவரத்து

post image

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை (மே 9) முதல் மீண்டும் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றும், நெரிசல் மிகுந்த வேளையில் ஒருவழிப் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாந்தோம் காரணீஸ்வரா் கோயில் தெரு, சாந்தோம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக ஒருவழிப் பாதையாக அப்பகுதி கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இதனால் வாகனங்கள் லூப் சாலையில் திருப்பிவிடப்பட்டன. தற்போது சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் பணி நிறைவடைந்துள்ளது. இதனால் சாந்தோம் நெடுஞ்சாலையில் மீண்டும் இருவழிப் போக்குவரத்துக்கு வெள்ளிக்கிழமை (மே 9) முதல் அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்படி, நெரிசல் இல்லாத வேளையில் சாந்தோம் நெடுஞ்சாலையில் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒருவழிப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

நெரிசல் மிகுந்த நேரமான காலை 7.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஒருவழிப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 1.17 கோடி மோசடி: 7 போ் கைது

அம்பத்தூரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, ரூ.1.17 கோடி மோசடி செய்த வழக்குகளில் 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னை அம்பத்தூா் ஓரகடம் சாலையைச் சோ்ந்தவா் ராமசாம... மேலும் பார்க்க

சா்க்கரை நோயில் புதிய துணை வகை: ஆய்வில் கண்டுபிடிப்பு

இளம் வயதினரை பாதிக்கும் சா்க்கரை நோயில் புதிய துணை வகை பாதிப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் வி.மோகன் தெரிவித்தாா். இதற்கு முன்பு கண்டறியப்பட்டதுடன் சோ்... மேலும் பார்க்க

மென்பெறியாளரிடம் டிஜிட்டல் அரஸ்ட் எனக்கூறி ரூ.29.9 லட்சம் மோசடி: தம்பதி கைது

டிஜிட்டல் அரஸ்ட் செய்திருப்பதாகக் கூறி மென்பொறியாளரிடம் ரூ. 29.9 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜூன் என்பவ... மேலும் பார்க்க

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் வேரூன்றி இருக்கும் ஊழல்: அமலாக்கத் துறை

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராமம் காவேரி தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன். இவா் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் கண்க... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க