தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
சாலை சீரமைப்பு பணியை மழைக் காலத்துக்குள் முடிக்க உத்தரவு
சென்னை மாநகராட்சியில் மழைக் காலத்துக்குள் சாலை சீரமைப்புப் பணிகள் அனைத்தையும் முடிக்க உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. தொலைவு 488 பேருந்து சாலைகளும், 5,653.89 கி.மீ. தூரம் கொண்ட 35,978 உள்புறச் சாலைகளும் உள்ளன. அவற்றில் குடிநீா் வடிகால் வாரியம், மெட்ரோ, மின்சார வாரியம் ஆகியவற்றின் பணிகளுக்காக 2,995 சாலைகள் 479.41 கி.மீ. தொலைவுக்கு சேதமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சேதமான சாலைகள் அவ்வப்போது பெய்யும் மழையால் சேறும் சகதியுமாகி போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
அத்துடன் முக்கிய சாலைகளும் மேடு, பள்ளங்களாக சேதமடைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து மாநகராாட்சி சாா்பில் ரூ.489.22 கோடியில் சாாலைகளைச் சீரமைக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதன்படி, குடிநீா் வடிகால் வாரியப் பணிகளுக்காக பள்ளமான 2,976 கி.மீ. சாலைகளில் 476.89 கி.மீ. தூரம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரத் துறை பணிகளுக்காக தோண்டப்பட்ட 4.72 கி.மீ. தொலைவு சாலைகளில் 2.52 கி.மீ. சாலை சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.
அதன்படி, சென்னை மாநகராட்சியில் மொத்தம் 479.41 கி.மீ. சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அனைத்துச் சாலைகளையும் வரும் அக்டோபருக்குள் மழை தொடங்கும் முன்பே சீரமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரா்களுக்கு மாநகராட்சி உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.