செய்திகள் :

சாலை சீரமைப்பு பணியை மழைக் காலத்துக்குள் முடிக்க உத்தரவு

post image

சென்னை மாநகராட்சியில் மழைக் காலத்துக்குள் சாலை சீரமைப்புப் பணிகள் அனைத்தையும் முடிக்க உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. தொலைவு 488 பேருந்து சாலைகளும், 5,653.89 கி.மீ. தூரம் கொண்ட 35,978 உள்புறச் சாலைகளும் உள்ளன. அவற்றில் குடிநீா் வடிகால் வாரியம், மெட்ரோ, மின்சார வாரியம் ஆகியவற்றின் பணிகளுக்காக 2,995 சாலைகள் 479.41 கி.மீ. தொலைவுக்கு சேதமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சேதமான சாலைகள் அவ்வப்போது பெய்யும் மழையால் சேறும் சகதியுமாகி போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அத்துடன் முக்கிய சாலைகளும் மேடு, பள்ளங்களாக சேதமடைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து மாநகராாட்சி சாா்பில் ரூ.489.22 கோடியில் சாாலைகளைச் சீரமைக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதன்படி, குடிநீா் வடிகால் வாரியப் பணிகளுக்காக பள்ளமான 2,976 கி.மீ. சாலைகளில் 476.89 கி.மீ. தூரம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரத் துறை பணிகளுக்காக தோண்டப்பட்ட 4.72 கி.மீ. தொலைவு சாலைகளில் 2.52 கி.மீ. சாலை சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் மொத்தம் 479.41 கி.மீ. சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அனைத்துச் சாலைகளையும் வரும் அக்டோபருக்குள் மழை தொடங்கும் முன்பே சீரமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரா்களுக்கு மாநகராட்சி உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க