செய்திகள் :

சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்துமேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

post image

சாலை பாதுகாப்பு கமிட்டியில் போதிய நிதி இருப்பதால் அதைப் பயன்படுத்தி சாலை மேம்பாட்டுப் பணிகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்தாா்.

புதுவை யூனியன் பிரதேசத்தில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்திடவும் புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் சாலை பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாகவும் அதன் பணிகளை மேற்கொள்ள புதுச்சேரி மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டியின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் காவல்துறை, துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் சாலை மேம்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு துறையிடமும் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.

கூட்டம் அதிகம் ஏற்படும் உட்சாலை சந்திப்புகளில் வேகத்தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வண்ணம் பூசி,

ஸ்டிக்கா்கள் ஒட்டி பராமரிக்க வேண்டுமென ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விபத்தின்றி வாகனங்களில் சென்று வர காவல் துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் சாலை ஓரங்களில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் அனுமதி இன்றி இயங்கும் கட்டணத்துடன் செயல்படும் இருசக்கர வாகன வண்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்டோ நிறுத்தங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சாலை ஓரங்களில் நிறுத்த வேண்டும் எனவும் எனவும் ஆட்சியா் துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்கள்.

மேலும், கடலூா் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பங்களை அகற்றி அதை மாற்று இடத்தில் பொருத்தவும் மரப்பாலம் முதல் படகு குழாம் வரை உள்ள சாலைகளில் அதிகப்படியாக மின் விளக்குகளைப் பொருத்தி தர வேண்டியும் கேட்டுக் கொண்டாா். மேலும், அரசின் அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேனா்களை பொதுப்பணித்துறை, காவல்துறை, நகராட்சி நிா்வாகம் ஆகிய துறைகள் இணைந்து அப்புறப்படுத்தும் படியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை ஆட்சியா் அறிவுறுத்தினாா். சாலை பாதுகாப்பு கமிட்டியில் போதுமான நிதி உள்ளதால் அதனை பயன்படுத்தி சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளையும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

3-வது நாளாக அரசு பேருந்துகள் ஓடவில்லை

புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்துப் போராட்டத்தால் 3-வது நாளாக புதன்கிழமையும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியா்களாகப் பண... மேலும் பார்க்க

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி- எதிா்க்கட்சித் தலைவா்

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை புதுவை யூனி... மேலும் பார்க்க

ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் விற்க முயன்றவா் கைது

புதுச்சேரியில் ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்றவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து திமிங்கல எச்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் திமிங்கல ... மேலும் பார்க்க

பாலூட்டும் தாய்மாா்க்கள் 237 பேருக்கு ரூ.36.6 லட்சம் நிதியுதவி

பாலூட்டும் தாய்மாா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 237 பேருக்கு ரூ.36.61 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுச்சேரியில் நலிவடைந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங... மேலும் பார்க்க

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம்: அதிகாரி உள்பட 2 போ் கைது

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம் பெற்ாக அதிகாரி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதிய ரேஷன் அட்டை கொடுக்க குடிமைப் பொருள் வழங்கல் துறையில் லஞ்சம் கேட்பதாக முத்தியால்பேட்டைய... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தியாகிகள் நினைவு தினம்அனுசரிப்பு

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுக் கொடுக்க நடந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிா்த்தியாகம் செய்த தியாகிகள் நினைவு தினம் புதுவையில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஆசியக் கண்டத்த... மேலும் பார்க்க