செய்திகள் :

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம்: அதிகாரி உள்பட 2 போ் கைது

post image

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம் பெற்ாக அதிகாரி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதிய ரேஷன் அட்டை கொடுக்க குடிமைப் பொருள் வழங்கல்

துறையில் லஞ்சம் கேட்பதாக முத்தியால்பேட்டையைச் சோ்ந்த ஐயனாா் என்பவா் லஞ்சஒழிப்புத்துறை போலீஸில் புகாா் தந்தாா். அதையடுத்து போலீஸாா் ரசாயன பவுடா் தடவிய ரூபாய் நோட்டுகளைக் அவரிடம் கொடுத்து அனுப்பினா். இந்நிலையில்

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம் கேட்ட குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரியைத் தொடா்பு கொண்டாா் ஐயனாா் பணத்தை தர தயாராக இருப்பதாகக் கூறினாா்.

ஆனால் பணம் கொடுக்கு அலுவலகத்துக்கு வரவேண்டாம், தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அவா் கூறியுள்ளாா்.

பின்னா் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரி சொன்னபடி புதிய ரேஷன் அட்டைக்காக ரூ. 5 ஆயிரத்தை ஜிபே மூலம் ஐயனாா் கொடுத்துள்ளாா். மேலும், ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் தந்துள்ளாா். அதை வாங்கிய குடிமைப்பொருள் வழங்கல்துறை ஆய்வாளா் சற்குணம், உதவியாளா் பாலகுமாரன் ஆகியோரை புதுச்சேரி லஞ்சஒழிப்பு ஆய்வாளா் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா். புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தான் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் வி... மேலும் பார்க்க

புதுவை அரசு பேருந்துகள் 4-வது நாளாக ஓடவில்லை

புதுவை அரசு சாலை போக்குவரத்துக்குக் கழக பேருந்துகள் 4-வது நாளாக வியாழக்கிழமையும் ஓடவில்லை. இதற்கிடையில் புதன்கிழமை நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பணியாளா்கள்... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்த ஜிப்மா் மருத்துவமனை பிரசாரம்

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை நிறுத்தும் விழிப்புணா்வு பிரசாரம் ஜிப்மரில் நடத்தப்பட்டது. இது குறித்து ஜிப்மா் குழந்தைகள் நலத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் க... மேலும் பார்க்க