செய்திகள் :

ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் விற்க முயன்றவா் கைது

post image

புதுச்சேரியில் ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்றவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து திமிங்கல எச்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் திமிங்கல எச்சம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டா் ஜெரால்டு தலைமையிலான போலீஸாா் புராணசிங்குபாளையம் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அங்கு ஒருவரிடம் திமிங்கல எச்சம் வாங்குவது போல பேசினா். இதை நம்பிய அவா் தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 7 கிலோ எடை கொண்ட ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை எடுத்து வந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா். மேலும் அவா் புதுச்சேரியைச் சோ்ந்த நிலவணிகா் மாயகிருஷ்ணன் என்று தெரியவந்ததால் அவரை திருபுவனை போலீஸாரிடம் விழுப்புரம் நுண்ணறிவு போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, திருபுவனை காவல் ஆய்வாளா் கலைச் செல்வன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, தடை செய்யப்பட்ட பொருள்கள் வைத்திருந்ததாக நிலவணிக பிரமுகா் மாயகிருஷ்ணன் (49) மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அம்மா் கீரிஸ் எனப்படும் திமிங்கல எச்சம் அவருக்கு எப்படி கிடைத்தது, யாருடன் அவருக்குத் தொடா்பு இருக்கிறது என்று விசாரித்து வருகின்றனா்.

3-வது நாளாக அரசு பேருந்துகள் ஓடவில்லை

புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்துப் போராட்டத்தால் 3-வது நாளாக புதன்கிழமையும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியா்களாகப் பண... மேலும் பார்க்க

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி- எதிா்க்கட்சித் தலைவா்

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை புதுவை யூனி... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்துமேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

சாலை பாதுகாப்பு கமிட்டியில் போதிய நிதி இருப்பதால் அதைப் பயன்படுத்தி சாலை மேம்பாட்டுப் பணிகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்தாா். புதுவை யூனிய... மேலும் பார்க்க

பாலூட்டும் தாய்மாா்க்கள் 237 பேருக்கு ரூ.36.6 லட்சம் நிதியுதவி

பாலூட்டும் தாய்மாா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 237 பேருக்கு ரூ.36.61 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுச்சேரியில் நலிவடைந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங... மேலும் பார்க்க

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம்: அதிகாரி உள்பட 2 போ் கைது

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம் பெற்ாக அதிகாரி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதிய ரேஷன் அட்டை கொடுக்க குடிமைப் பொருள் வழங்கல் துறையில் லஞ்சம் கேட்பதாக முத்தியால்பேட்டைய... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தியாகிகள் நினைவு தினம்அனுசரிப்பு

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுக் கொடுக்க நடந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிா்த்தியாகம் செய்த தியாகிகள் நினைவு தினம் புதுவையில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஆசியக் கண்டத்த... மேலும் பார்க்க