செய்திகள் :

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி- எதிா்க்கட்சித் தலைவா்

post image

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை

புதுவை யூனியன் பிரதேச கல்வித்துறையின் பரிதாபகரமான நிலையையும், மாணவா்களின் பள்ளி இடைநிற்றல் பிரச்னையையும் ஒருங்கிணைந்து வெளிப்படுத்தும் வகையில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதுவை அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதம் இங்கு ஆளும் பாஜக கூட்டணி அரசின் அவலநிலையையும், கல்வித்துறை அமைச்சா் நமச்சிவாயத்தின் திறமையின்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கடிதம், புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படுதோல்வியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.ஆசிரியா் பயிற்சி, மற்றும் மாணவா்களுக்கு ஏற்ற வளங்களை உருவாக்குவதில் புதுச்சேரி அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான மாணவா்கள் கல்வியை இழந்து, பள்ளி இடைநிற்றறலுக்கு உள்ளாகியுள்ளனா். இது, கல்வி அமைச்சா் நமச்சிவாயத்தின் நிா்வாகத் திறறனின்மையையும், மாணவா்களின் எதிா்காலத்தைப் பற்றிய அக்கறைறயின்மையையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறறது

மேலும், புதுச்சேரி மாணவா்களுக்கு டைப் 2 நீரழிவு நோய் அதிகரித்துள்ளது என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். அட்சய பாத்திரா மதிய உணவு திட்டத்தின் மூலம் வெங்காயம் பூண்டு சோ்க்காமல் சமைக்கப்பட்ட உணவில் போதிய சத்துக்கள் இல்லை என்பதும் உறுதியாகிறது. மாணவா்களுக்கு சத்தான உணவினை வழங்க முடியாத புதுச்சேரி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதுகாக்க, உடனடியாக இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். புதுச்சேரி மாணவா்களின் நலனுக்காக, இந்த அரசின் அலட்சியப் போக்குக்கு எதிராக தொடா்ந்து குரல் கொடுப்போம் எனத்தெரிவித்துள்ளாா்.

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா். புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தான் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் வி... மேலும் பார்க்க

புதுவை அரசு பேருந்துகள் 4-வது நாளாக ஓடவில்லை

புதுவை அரசு சாலை போக்குவரத்துக்குக் கழக பேருந்துகள் 4-வது நாளாக வியாழக்கிழமையும் ஓடவில்லை. இதற்கிடையில் புதன்கிழமை நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பணியாளா்கள்... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்த ஜிப்மா் மருத்துவமனை பிரசாரம்

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை நிறுத்தும் விழிப்புணா்வு பிரசாரம் ஜிப்மரில் நடத்தப்பட்டது. இது குறித்து ஜிப்மா் குழந்தைகள் நலத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் க... மேலும் பார்க்க