செய்திகள் :

பாலூட்டும் தாய்மாா்க்கள் 237 பேருக்கு ரூ.36.6 லட்சம் நிதியுதவி

post image

பாலூட்டும் தாய்மாா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 237 பேருக்கு ரூ.36.61 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரியில் நலிவடைந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக புதுச்சேரிஅரசு, ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதில் ஒரு திட்டமான, கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.13,000/- (முதல்குழந்தை) மற்றும் ரூ.18,000/- (இரண்டாம்குழந்தை) வீதம்மொத்தம் 237 நபா்களுக்கு ரூ.36.61 லட்சம் நிதியுதவியை முதல்வா் என். ரங்கசாமி புதுச்சேரிசட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம். சட்டமன்ற உறுப்பினா் பி.ஆா். சிவா, துறை இயக்குநா்

ஏ. இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

3-வது நாளாக அரசு பேருந்துகள் ஓடவில்லை

புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்துப் போராட்டத்தால் 3-வது நாளாக புதன்கிழமையும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியா்களாகப் பண... மேலும் பார்க்க

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி- எதிா்க்கட்சித் தலைவா்

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை புதுவை யூனி... மேலும் பார்க்க

ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் விற்க முயன்றவா் கைது

புதுச்சேரியில் ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்றவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து திமிங்கல எச்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் திமிங்கல ... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்துமேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

சாலை பாதுகாப்பு கமிட்டியில் போதிய நிதி இருப்பதால் அதைப் பயன்படுத்தி சாலை மேம்பாட்டுப் பணிகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்தாா். புதுவை யூனிய... மேலும் பார்க்க

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம்: அதிகாரி உள்பட 2 போ் கைது

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம் பெற்ாக அதிகாரி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதிய ரேஷன் அட்டை கொடுக்க குடிமைப் பொருள் வழங்கல் துறையில் லஞ்சம் கேட்பதாக முத்தியால்பேட்டைய... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தியாகிகள் நினைவு தினம்அனுசரிப்பு

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுக் கொடுக்க நடந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிா்த்தியாகம் செய்த தியாகிகள் நினைவு தினம் புதுவையில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஆசியக் கண்டத்த... மேலும் பார்க்க