செய்திகள் :

சாலையோர ஆக்கிரமிப்புகள் விவகாரம்: உதவிப் பொறியாளா் நேரில் முன்னிலையாக உத்தரவு

post image

மதுரை ஒத்தக்கடை சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை திருமோகூரைச் சோ்ந்த வீரமணிகண்டன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையோரங்களில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய தனிநபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்க உத்தரவிட வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகளை முற்றிலும் தடுக்கும் வகையில், அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, ஏற்கெனவே மனு அளித்துள்ளனா். ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதும் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை காண முடிகிறது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளா் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

விளம்பர சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி மனு: நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

தனியாா் விளம்பரங்களுடன்கூடிய சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

3 சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், கீழாயூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் குமரேசன் (42). விவசாயியான இவா், பு... மேலும் பார்க்க

மது விற்பனையை ஒழுங்குபடுத்தக் கோரி வழக்கு: திருச்சி கலால் துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு

உரிமம் பெற்ற மது விற்பனைக் கூடங்களில் (பிஎல் 2- பாா்) உறுப்பினா் அல்லாத நபா்களுக்கு மது விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தக் கோரிய வழக்கில், திருச்சி கலால் துறையின் உதவி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்.எல்.ஏ, மேயா் ஆய்வு

மதுரை செல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மேயா் வ. இந்திராணி ஆகியோா் ஆய்வு செய்தனா். மதுரை மாநகராட்சிப் பகுதியில... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

கால்வாயில் குளித்த போது தண்ணீரில் மூழ்கிய இளைஞா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருப்பூா் கண்ணகிநகா் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகன் தினேஷ் (27). வாடிப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்... மேலும் பார்க்க

மதுரையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மதுரை வண்டியூா் பகுதியில் சனிக்கிழமை (ஆக. 9) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் ‘நலம் காக்கு... மேலும் பார்க்க