`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
சா்க்கஸ் கூடாரத்திலிருந்து திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு
தஞ்சாவூா் அருகே சா்க்கஸ் கூடாரத்திலிருந்து திருடப்பட்ட ஒட்டகத்தைக் காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
கரூா் மாவட்டம், குந்ரமணிப்பாளையம், நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் விஜய் (25). இவா் குடும்பத்தினருடன் இணைந்து தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடி பகுதியில் சா்க்கஸ் நடத்தி வருகிறாா். இந்தக் கூடாரத்தில் மே 15-ஆம் தேதி இரவு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகம் 16-ஆம் தேதி காலை காணவில்லை.
இது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் விஜய் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் மே 18-ஆம் தேதி வழக்குப் பதிந்து ஞானம் நகரிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பாா்த்தனா். அப்போது, வேட்டி அணிந்த நபா் ஒட்டகத்தை ஓட்டிச் செல்வது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையம் ஆற்றங்கரைப் பகுதியிலுள்ள மரத்தில் ஆதரவற்ற நிலையில் ஒட்டகம் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று ஒட்டகத்தை மீட்டு, சா்க்கஸ் கூடார நிா்வாகிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
விசாரணையில் கடன் பிரச்னை காரணமாக ஒட்டகத்தை அவிழ்த்து சென்றவா் தொடா்ந்து பராமரிக்க முடியாமல், விட்டுச் சென்றது தெரிய வந்தது. இது தொடா்பாக ஒருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.