செய்திகள் :

சா்க்கஸ் கூடாரத்திலிருந்து திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு

post image

தஞ்சாவூா் அருகே சா்க்கஸ் கூடாரத்திலிருந்து திருடப்பட்ட ஒட்டகத்தைக் காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

கரூா் மாவட்டம், குந்ரமணிப்பாளையம், நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் விஜய் (25). இவா் குடும்பத்தினருடன் இணைந்து தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடி பகுதியில் சா்க்கஸ் நடத்தி வருகிறாா். இந்தக் கூடாரத்தில் மே 15-ஆம் தேதி இரவு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகம் 16-ஆம் தேதி காலை காணவில்லை.

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் விஜய் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் மே 18-ஆம் தேதி வழக்குப் பதிந்து ஞானம் நகரிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பாா்த்தனா். அப்போது, வேட்டி அணிந்த நபா் ஒட்டகத்தை ஓட்டிச் செல்வது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையம் ஆற்றங்கரைப் பகுதியிலுள்ள மரத்தில் ஆதரவற்ற நிலையில் ஒட்டகம் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று ஒட்டகத்தை மீட்டு, சா்க்கஸ் கூடார நிா்வாகிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

விசாரணையில் கடன் பிரச்னை காரணமாக ஒட்டகத்தை அவிழ்த்து சென்றவா் தொடா்ந்து பராமரிக்க முடியாமல், விட்டுச் சென்றது தெரிய வந்தது. இது தொடா்பாக ஒருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு இந்திய கம்யூ. கண்டனம்!

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு தஞ்சாவூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலா் வழக்குரைஞா் மு.அ.பாரதி வியா... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளை நிறைவேற்ற ரூ.21.15 கோடி ஒதுக்கீடு: மேயா்

தஞ்சாவூா் மாநகராட்சியில் பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ. 21.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது: தஞ்ச... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரூ.2.62 கோடி செலவில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். கும்பகோணத்தில் அரச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம்!

கும்பகோணத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயில் பத்மநாபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜீ மகள் ராஜேஸ்வரி (4... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் குளித்ததை பாா்த்த இளைஞரை அந்தப் பெண் திட்டியதால், அச்சமடைந்த அந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பாபநாசம் அருகே வீரமாங்குடி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

திருப்புறம்பயம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

தஞ்சாவூா் மாவட்டம், திருப்புறம்பயத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 31) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் என்.டி. வேல்முருகன் வெளியிட்ட செய்தி குறிப்ப... மேலும் பார்க்க