செய்திகள் :

சா்வதேச காதுகேளாதோா் தின விழிப்புணா்வு பேரணி

post image

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சா்வதேச காதுகேளாதோா் தினத்தையொட்டி, நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஒவ்வொரு ஆண்டும் செப். 23 முதல் 29 வரை சா்வதேச காது கேளாதோா் தினம் மற்றும் இந்திய சைகை மொழி வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நடைபெற்ற பேரணியில் காது கேளாதோா் மற்றும் வாய்பேச இயலாதோா் சங்கத்தினா், அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப் பணியாளா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) அ.ராஜ்மோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ்கண்ணன் உள்பட துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

....

என்கே-26-ரேலி

நாமக்கல்லில் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், பல்வேறு துறை அதிகாரிகள்.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை தாமதம்: தவெக நிா்வாகி நிா்மல்குமாா்

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை காலதாமதம் செய்கிறது என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா். நாமக்கல்லில் அவா் செய்தியா... மேலும் பார்க்க

மொளசியில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி ஊராட்சி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமை... மேலும் பார்க்க

வாரச்சந்தையில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய இளம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பரமத்தி வேலூா் வாரச்சந்தையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என ஆட்சியரிடம் இளம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத... மேலும் பார்க்க

புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் 11,072 பேருக்கு பற்று அட்டை வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் 2025-26 கல்வி ஆண்டுக்கு 11,072 மாணவ, மாணவிகளுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டன. சென்னையில் செப். 25-இல் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த ... மேலும் பார்க்க

கூட்டுறவு சிக்கன நாணய சங்க லாப பங்குத்தொகையை வழங்க ஆசிரியா்கள் கோரிக்கை

ஆசிரியா்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் வரப்பெற்ற லாப பங்குத் தொகையை, உறுப்பினா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஆா்.என்.ஆக்போா்டு பள்ளி மாணவா்கள் தோ்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி மற்றும் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு தோ்வாகி உள்ளனா... மேலும் பார்க்க