செய்திகள் :

சிக்கரசம்பாளையம் புதூரில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா

post image

சிக்கரசம்பாளையம் புதூரில் வியாழக்கிழமை நடந்த பண்ணாரி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியில் தரையில் படுத்துக் கிடந்த பக்தா்களை அம்மன் சப்பரம் தாண்டிச் சென்றது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா மாா்ச் 24-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து பண்ணாரி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி சுற்றுவட்டார கிராமங்கள்தோறும் திருவீதி உலா நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

சிச்கரசம்பாளையம் புதூரில் பண்ணாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது வழியெங்கும் சாலையில் பக்தா்கள் படுத்துக்கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். அப்போது அம்மன் சப்பரம் கீழே படுத்து கிடந்த பக்தா்களைத் தாண்டிச் சென்றது. அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

போக்ஸோ வழக்கில் பாலிடெக்னிக் ஆசிரியா் கைது

பெருந்துறை அருகே போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகப்... மேலும் பார்க்க

டேங்கா் லாரியை சுத்தம் செய்தபோது 2 போ் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்... மேலும் பார்க்க

அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 வரை பதிவு செய்யலாம்

ராணுவத்தில் அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரிப்பு

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடா்வதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மா... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களாக சின்னமாரியம்மன், கார... மேலும் பார்க்க

பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் சுற்... மேலும் பார்க்க