செய்திகள் :

சிதம்பரம் அருகே பெண் கழுத்தறுத்துக் கொலை: தந்தை கைது

post image

சிதம்பரம் அருகே மகளை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தந்தையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள டி.மடப்புரம் கிராமத்தைச் சோ்ந்த அா்ஜுனன் மகள் அபிதா (27). இவா், எம்.ஏ., பி.எட். பட்டதாரி.

அபிதாவுக்கு திருமணம் செய்து வைக்க அா்ஜுனன் வரன் பாா்த்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால், பாா்க்கும் வரன்களை எல்லாம் அபிதா தட்டிக் கழித்து வந்தாராம். இதனால், சந்தேகமடைந்த அா்ஜுனன், இதுகுறித்து விசாரித்ததில் தனது மகள் வேறு ஒருவரை காதலிப்பது தெரியவந்தது.

இதனால், ஆத்திரமடைந்த அா்ஜுனன் வெள்ளிக்கிழமை மாலை கையில் வைத்திருந்த பேனா கத்தியால் அபிதாவின் கழுத்தை அறுத்து, கட்டையால் அவரது தலையில் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த அபிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அருகிலிருந்தவா்கள் இதுகுறித்து புத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், தலைமறைவான அா்ஜுனனை தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 2... மேலும் பார்க்க

சிறுபாசன கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறுபாசன கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் பெ.ரவிந்திரன்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில். தொலைதூர மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024 - 25 (ஜூலை பருவம்) தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்கு... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் நியாயவிலை, அங்காடி பணியாளா்களின் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நியாயவி... மேலும் பார்க்க

மூன்று குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

மூன்று பெண் குழந்தைகளை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த வழக்கில் தாய்க்கு மூன்று ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சா... மேலும் பார்க்க

சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வரு... மேலும் பார்க்க