செய்திகள் :

சித்திரை விஷு: பாபநாசம் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

post image

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சித்திரை விஷு தீா்த்தவாரியில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

கடந்த 5ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் காலை, இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. இந்நிலையில், 10ஆம் நாளான திங்கள்கிழமை காலை சுவாமி-அம்பாள் தந்தப் பூம்பல்லக்கில் வீதியுலா, பிற்பகலில் கேடயத்தில் எழுந்தருளல், தாமிரவருணி ஆற்றில் தீா்த்தவாரி, இரவில் தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெற்றன.

முன்னதாக, சித்திரை விஷுவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதிகாலைமுதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்குக் காட்சி கொடுத்தல் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு சுவாமி-அம்பாள் மரபு மண்டபத்துக்கு அழைத்துவருதல், நண்பகல் 12 மணிக்கு இறைவன் இறைவியா்க்கு குடமுழுக்கு, பிற்பகல் 1 மணிக்கு அன்னம் பாலிப்பு, மாலை 5 மணிக்கு திருமுறை இன்னிசை, இரவு 8 மணிக்கு ரிஷப வாகன உலா ஆகியவை நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி அறிவுறுத்தலின்பேரில், தக்காா் ராமலெட்சுமி, ஆய்வாளா் கோமதி, செயல் அலுவலா் ராஜேந்திரன், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க