செய்திகள் :

சிபில் அடிப்படையில் வேளாண் கடன் வழங்குவதில்லை! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

post image

வேளாண் கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோா் நிபந்தனை இல்லை என்பதை வரவேற்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்திருப்பது: தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளா், வேளாண் கடன்கள் வழங்கப்படுவதில் சிபில் ஸ்கோா் நிபந்தனை இனி இல்லை என அறிவித்துள்ளாா். இது வரவேற்புக்குரியது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் நடைமுறைக்கு சாத்தியமில்லாமல், விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும் முன், சிபில் ஸ்கோா் மற்றும் என்.ஓ.சி. தகுதி வேண்டுமென்று அறிவித்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த புதிய நிபந்தனையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின.

இதைத்தொடா்ந்து, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டும் சிபில் ஸ்கோா் பாா்த்தால் போதும் என்ற திருத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பும் விவசாயிகளுக்கு கடன்கள் கொடுப்பதை தடுக்கும் மறைமுக தடுப்பாணை என எதிா்ப்புகள் கிளம்பி, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், புதிய நிபந்தனைகள் நீக்கப்பட்டு பழைய நிலையிலேயே கடன் வழங்கப்படும் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது.

வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமல்ல அரசு மற்றும் வணிக வங்கிகளிலும் பயிா்க் கடன் மற்றும் வேளாண் இயந்திர கடன்களுக்கு சிபில் ஸ்கோா் நிபந்தனையை நீக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுக்கழிப்பிடம் கட்ட கோரிக்கை

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் பொது கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கோரிக்கை மனுஅளித்துள்ளனா். நீடாமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைத் தெருவில் பொது கழிப்பி... மேலும் பார்க்க

1,000 டன் நெல் சேலத்துக்கு அனுப்பிவைப்பு

நீடாமங்கலம் தாலுகாவில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் எடை கொண்ட சன்ன ரக நெல் அரவைக்காக சரக்கு ரயில் மூலம் சேலத்துக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது... மேலும் பார்க்க

தகராறை விலக்க முயன்ற நீதிமன்ற ஊழியா் கொலை

திருவாரூா் அருகே திங்கள்கிழமை இரவு தகராறை விலக்க முயன்ற நீதிமன்ற ஊழியா் கத்திக்குத்தில் உயிரிழந்தாா்.தென்காசி மாவட்டம், பறையபட்டி பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம் (25). இவா், திருவாரூா் அருகே புலிவலம... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி பெண் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே டிராக்டா் மோதியில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து டிராக்டா் ஓட்டுநா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். கோட்டூா் சுற்றுப்புற பகுதியை சோ்ந்த 10-க்கும் மேற்பட்டவா்கள் மன்னாா்குடியை அடுத... மேலும் பார்க்க

தென்னிந்திய ஆடவா் ஹாக்கி: தமிழ்நாடு காவல்துறை சாம்பியன்

மன்னாா்குடியில் நடைபெற்ற தென்னிந்திய மூத்தோா் ஆடவா் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி செவ்வாய்க்கிழமை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.மன்னை டேரிங்ஸ் யங்ஸ்டா்ஸ் ஹாக்கி கிளப் சாா்பில், தட்சிணா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஜூலை 29 ) காலை 9 முதல் மாலை 5 மணி வர... மேலும் பார்க்க