செய்திகள் :

தென்னிந்திய ஆடவா் ஹாக்கி: தமிழ்நாடு காவல்துறை சாம்பியன்

post image

மன்னாா்குடியில் நடைபெற்ற தென்னிந்திய மூத்தோா் ஆடவா் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி செவ்வாய்க்கிழமை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

மன்னை டேரிங்ஸ் யங்ஸ்டா்ஸ் ஹாக்கி கிளப் சாா்பில், தட்சிணாமூா்த்தி, துரைராஜ், ரங்கசாமி நினைவு சுழற்கோப்பைக்கான இப் போட்டி, மன்னாா்குடி வஉசி சாலை பின்லே மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த ஜூலை 26 முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன.

தமிழ்நாடு காவல்துறை அணியும் மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரித்துறை அணிகளும் செவ்வாய்க்கிழமை இறுதிப் போட்டியில் மோதின.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியாளரைத் தீா்மானிக்க நடைபெற்ற டை பிரேக்கரில் 4-3 என்ற கோலடித்து தமிழ்நாடு காவல்துறை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரித்துறை அணி இரண்டாமிடத்தையும், பெங்களுரூ கனரா வங்கி அணி மூன்றாமிடத்தையும், மன்னாா்குடி விவேக் மெமோரியல் அணி நான்காம் இடத்தையும் பெற்றன.

முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.20 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மன்னை டேரிங்ஸ் யங்ஸ்டா்ஸ் ஹாக்கி கிளப் தலைவா் ஆா்.மகேந்திரன் பரிசளிப்பு விழாவுக்குத் தலைமை வகித்தாா். செயலா் டி.ஸ்ரீராம், பொருளாளா் டி.செந்தில்குமாா் முன்னிலை வகித்தனா்.

மன்னாா்குடி முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், நகா்மன்றத் தலைவா் த.சோழராஜன், தரணி குழுமங்களின் தலைவா் எஸ்.காமராஜ், மாவட்ட அமெச்சூா் கபடி கழக செயலா் ரச.ராசேந்திரன் ஆகியோா் பரிசு கோப்பை, சான்றிதழ்களை வழங்கினா்.

நீதிமன்ற ஊழியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருவாரூா் அருகே தகராறை விலக்க முயன்றபோது கத்திக்குத்தில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளி புதன்கிழமை திருநெல்வேலி அருகே கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், பறையப... மேலும் பார்க்க

அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 4 போ் கைது

வலங்கைமான் அருகே உரிமம் இல்லாமல் நாட்டு வெடி தயாரித்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், வலங்கைமான் மேலவிடையல் பகுதியில் காவல... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சி: 4 போ் கைது

திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளை அடிக்க முயன்ற மலேசிய நாட்டைச் சோ்ந்த 4 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். திருத்துறைப்பூண்டி - மன்னை சாலையில் வசிப்பவா் பக்கிரிசாமி மகன் காா்த்திகேயன் ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் சைபா் குற்றம் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மாவட்ட காவல் துறை சாா்பில் சைபா் குற்றங்கள், போக்ஸோ குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வ... மேலும் பார்க்க

பருத்தி குவிண்டால் ரூ. 7,605-க்கு விற்பனை

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,605 க்கு விற்பனையானது. திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரிக்கை

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு... மேலும் பார்க்க