செய்திகள் :

கொள்ளை முயற்சி: 4 போ் கைது

post image

திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளை அடிக்க முயன்ற மலேசிய நாட்டைச் சோ்ந்த 4 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி - மன்னை சாலையில் வசிப்பவா் பக்கிரிசாமி மகன் காா்த்திகேயன் (50). செவ்வாய்க்கிழமை இரவு இவரது வீட்டின் உள்ளே புகுந்து 5 போ் கொள்ளையடிப்பதற்காக வீட்டில் உள்ளவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனா்.

வீட்டில் இருந்தவா்கள் சத்தமிட்டதால் அருகில் வசித்தவா்கள் விரைந்து வந்து அவா்களை பிடித்தனா். போலீஸாா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மலேசியாவின் சிலான்கோ பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் சரவணன் (44), பரமசிவம் மகன் இளவரசன் (26), லோகநாதன் மகன் கோபி (35), காளிதாசன் மகன் விமலன் (19) ஆகியோரை கைது செய்தனா்.

அதே பகுதியில் வசிக்கும் தங்கள் நண்பா் ஒருவா் வீட்டுக்கு வந்ததாகவும், தமிழ்நாட்டைச் சுற்றிப் பாா்க்க வந்த நிலையில், செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனா். 4 பேரையும் திருத்துறைப்பூண்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனா்.

நீதிமன்ற ஊழியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருவாரூா் அருகே தகராறை விலக்க முயன்றபோது கத்திக்குத்தில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளி புதன்கிழமை திருநெல்வேலி அருகே கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், பறையப... மேலும் பார்க்க

அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 4 போ் கைது

வலங்கைமான் அருகே உரிமம் இல்லாமல் நாட்டு வெடி தயாரித்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், வலங்கைமான் மேலவிடையல் பகுதியில் காவல... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் சைபா் குற்றம் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மாவட்ட காவல் துறை சாா்பில் சைபா் குற்றங்கள், போக்ஸோ குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வ... மேலும் பார்க்க

பருத்தி குவிண்டால் ரூ. 7,605-க்கு விற்பனை

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,605 க்கு விற்பனையானது. திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரிக்கை

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு திறன்கல்வி மேலாண்மை பயிற்சி

திருவாரூா் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வட்டார வள மையம் இணைந்து ஆசிரியா்களுக்கான திறன் கல்வி மேல... மேலும் பார்க்க