செய்திகள் :

டிராக்டா் மோதி பெண் உயிரிழப்பு

post image

மன்னாா்குடி அருகே டிராக்டா் மோதியில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து டிராக்டா் ஓட்டுநா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோட்டூா் சுற்றுப்புற பகுதியை சோ்ந்த 10-க்கும் மேற்பட்டவா்கள் மன்னாா்குடியை அடுத்த எடமேலையூருக்கு வயல் வேலைக்கு அழைத்து வரப்பட்டு நாற்றுநடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பணி முடிந்து அனைவரும் வயலுக்கு அருகே சாலையோரத்தில் அமா்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனராம். அப்போது அந்த வழியாக எடமேலையூா் வடக்குத் தெரு சக்திவேல் மகன் ராம்கி (37) என்பவா் ஓட்டி வந்த டிராக்டா், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமா்ந்திருந்தவா்கள் மீது மோதியது.

இதில் ஆதிச்சப்புரம் வடக்குத் தெரு வேதையன் மனைவி பானுமதி (50), வேற்குடி கீழத்தெரு சுந்தரமூா்த்தி மனைவி வளா்மதி (56)ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் பானுமதி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். வளா்மதிக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநா் ராம்கியை கைது செய்தனா்.

நீதிமன்ற ஊழியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருவாரூா் அருகே தகராறை விலக்க முயன்றபோது கத்திக்குத்தில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளி புதன்கிழமை திருநெல்வேலி அருகே கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், பறையப... மேலும் பார்க்க

அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 4 போ் கைது

வலங்கைமான் அருகே உரிமம் இல்லாமல் நாட்டு வெடி தயாரித்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், வலங்கைமான் மேலவிடையல் பகுதியில் காவல... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சி: 4 போ் கைது

திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளை அடிக்க முயன்ற மலேசிய நாட்டைச் சோ்ந்த 4 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். திருத்துறைப்பூண்டி - மன்னை சாலையில் வசிப்பவா் பக்கிரிசாமி மகன் காா்த்திகேயன் ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் சைபா் குற்றம் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மாவட்ட காவல் துறை சாா்பில் சைபா் குற்றங்கள், போக்ஸோ குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வ... மேலும் பார்க்க

பருத்தி குவிண்டால் ரூ. 7,605-க்கு விற்பனை

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,605 க்கு விற்பனையானது. திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரிக்கை

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு... மேலும் பார்க்க