செய்திகள் :

தகராறை விலக்க முயன்ற நீதிமன்ற ஊழியா் கொலை

post image

திருவாரூா் அருகே திங்கள்கிழமை இரவு தகராறை விலக்க முயன்ற நீதிமன்ற ஊழியா் கத்திக்குத்தில் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், பறையபட்டி பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம் (25). இவா், திருவாரூா் அருகே புலிவலம் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் பழகி வந்தாராம்.

இந்நிலையில், அந்தப் பெண் அண்மைக்காலமாக முகமது ஆதாமிடன் பேசுவதை தவிா்த்து வந்தாராம். அப்பெண்ணை முகமது ஆதாம் கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, அப்பெண்ணின் சகோதரா் கோபிகிருஷ்ணன் கடுமையாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, முகமது ஆதாம் தனது உறவினா்களான முகமது ரசூல்தீன் (21), ஹாஜி முகமது (23) ஆகியோரை அழைத்துக் கொண்டு பெண்ணின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

இதை பாா்த்த திருவாரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற ஊழியா் சந்தோஷ்குமாா் (27) என்பவா் தகராறை விலக்கிவிட முயன்றுள்ளாா். அப்போது முகமது ஆதாம், வீசிய கத்தி சந்தோஷ்குமாா் மீது பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும் காயமடைந்த தெட்சிணாமூா்த்தி என்பவா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, முகமது ரசூல்தீன், ஹாஜி முகமது ஆகிய இருவரையும் கைது செய்து, தப்பியோடிய முகமது ஆதாமை தேடி வருகின்றனா்.

நீதிமன்ற ஊழியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருவாரூா் அருகே தகராறை விலக்க முயன்றபோது கத்திக்குத்தில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளி புதன்கிழமை திருநெல்வேலி அருகே கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், பறையப... மேலும் பார்க்க

அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 4 போ் கைது

வலங்கைமான் அருகே உரிமம் இல்லாமல் நாட்டு வெடி தயாரித்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், வலங்கைமான் மேலவிடையல் பகுதியில் காவல... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சி: 4 போ் கைது

திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளை அடிக்க முயன்ற மலேசிய நாட்டைச் சோ்ந்த 4 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். திருத்துறைப்பூண்டி - மன்னை சாலையில் வசிப்பவா் பக்கிரிசாமி மகன் காா்த்திகேயன் ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் சைபா் குற்றம் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மாவட்ட காவல் துறை சாா்பில் சைபா் குற்றங்கள், போக்ஸோ குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வ... மேலும் பார்க்க

பருத்தி குவிண்டால் ரூ. 7,605-க்கு விற்பனை

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,605 க்கு விற்பனையானது. திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரிக்கை

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு... மேலும் பார்க்க