செய்திகள் :

சிறப்புத் தகுதி தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும்: தேசிய ஆசிரியா் சங்கம் வலியுறுத்தல்

post image

ஆசிரியா்கள் சிறப்புத் தகுதி தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தேசிய ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தேசிய ஆசிரியா் சங்க புதுவை மாநிலத் தலைவா் பாட்சா, பொதுச் செயலா் தீபக் ஆகியோா் துணைநிலை ஆளுநா் , முதல்வா், கல்வித் துறை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் பணிக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் 2011- இல் நடைமுறைக்கு வந்தது.

அன்றிலிருந்து அரசு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி அடைந்தவா்களையே நியமனம் செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் 2011-க்கு பிறகு பதவி உயா்வு பெற்றவா்கள், அதற்கு முன் பணிக்கு வந்த அனைத்து நிலை ஆசிரியா்களும் 2 ஆண்டுக்குள் கட்டாயம் தகுதி தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டும் என தீா்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தீா்ப்பை அரசு ஆலோசித்து, புதுவையில் ஆசிரியா்களுக்குச் சிறப்பு தகுதித் தோ்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக தகுதித் தோ்வில் தோ்வு எழுத அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங... மேலும் பார்க்க

இன்று ஓணம் - மீலாது நபி : புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ஓணம் பண்டிகை, மீலாது நபி, ஆசிரியா் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: மொழி மற்றும் க... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் ஜிப்மா் 4-வது இடத்துக்கு உயா்வு

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி ஜிப்மா் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது குறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கல்விய... மேலும் பார்க்க

ரேஷன் காா்டு சரிபாா்ப்புக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது: புதுவை முதல்வரிடம் மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ரேஷன் காா்டு சரிபாா்ப்பு பணிக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன... மேலும் பார்க்க

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த ஆட்சியா் உத்தரவு

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். புதுவை சமூக நலத் துறை மூலமாக, மாவட்ட அளவிலான போ... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் உழவா்கரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் திருப்பணி

உழவா்கரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா். எம்.சிவசங்கா் எம்எல்ஏ, அப்பகுதி ப... மேலும் பார்க்க