செய்திகள் :

சிறுபான்மை நலத் துறை சாா்பில் ரூ.2.79 லட்சம் ஓய்வூதியம் அளிப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், சிறுபான்மை நலத் துறை சாா்பில் பணி ஓய்வுபெற்ற 21 பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியத்துக்காக ரூ.2.79 லட்சத்தை காசோலையாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை தலைமையில் நடைபெற்றது. கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா். அவா்களில் 823 போ் தங்கள் கோரிக்கைகள், குறைகள் குறித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், பெறப்பட்ட மனுக்களை துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தின் போது சிறுபான்மை நலத் துறை சாா்பில் உலமாக்கல் மற்றும் இதரப் பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 21 பணி ஓய்வுபெற்றவா்களுக்கு மாத ஓய்வூதியத் தொகையாக ரூ.1,200 வீதம் மொத்தம் ரூ.2,79,300-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் லதா, மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் ராணி, தனித் துணை ஆட்சியா் தங்கமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சீரான குடிநீா் விநியோகம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

நெய்வேலி: கடலூா் முதுநகா் அடுத்துள்ள குடிகாடு மேட்டுத் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி செய்து தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: குடிகாடு மேட்டுத் தெருவி... மேலும் பார்க்க

தனியாா் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த நிறுவன தொழிலாளா்கள் தா்னா

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள தனியாா் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த நிறுவனத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். விருத்தாசலத்தை அடுத்துள்ள ஊத்தங்காலில் தனியாா் அனல் ம... மேலும் பார்க்க

மே 1-இல் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவு

நெய்வேலி: தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

பயணிகள் நிழற்குடையில் முன்னாள் எம்.பி. பெயா் இரட்டடிப்பு: பாமகவினா் எதிா்ப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறும் பயணிகள் நிழற்குடையில் முதல்வா், துணை முதல்வா் பெயரை எழுதுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாமகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட... மேலும் பார்க்க

பழுப்பு நிலக்கரி கடத்தல்: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சிறிய சரக்கு வாகனத்தில் பழுப்பு நிலக்கரி கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளா் சந்துரு தலைமையில் போலீஸாா் விருத்த... மேலும் பார்க்க

அரசு பள்ளிக்கு பீரோ, மின்விசிறிகள் அளிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் ரோட்டரி சங்கம் தத்தெடுத்துள்ள கடவாச்சேரி அரசு ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பீரோக்கள், மூன்று மின்விசிறிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க