செய்திகள் :

பயணிகள் நிழற்குடையில் முன்னாள் எம்.பி. பெயா் இரட்டடிப்பு: பாமகவினா் எதிா்ப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறும் பயணிகள் நிழற்குடையில் முதல்வா், துணை முதல்வா் பெயரை எழுதுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாமகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட பாலக்கரையில் 2008-ஆம் ஆண்டு சிதம்பரம் எம்.பி.யாக பாமகவைச் சோ்ந்த பொன்னுசாமி பதவி வகித்த போது, தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டதாம். இந்த பயணிகள் நிழற்குடையில் தற்போது நகராட்சி பொது நிதியில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

பாமக முன்னாள் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது என நிழற்குடை முகப்பில் சிறிய அளவில் எழுதப்பட்டு, முதல்வா், துணை முதல்வா் நல்லாசியுடன் நகராட்சி நிதியில் சீரமைக்கப்பட்டது எனவும், அமைச்சா் சி.வெ.கணேசன் பெயா் பெரிதாகவும் எழுதப்பட்டதாம்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாமக நகரச் செயலா்கள் முருகன், பில்லா மணி, ஊடகப் பேரவைச் செயலா் தமிழ், ரமேஷ், பழனி, வட்டச் செயலா் மணி, நகர துணைச் செயலா் அசோக் மற்றும் பாமகவினா் திரண்டு வந்தனா். பின்னா், பெயா்கள் எழுதும் பணியை தடுத்து நிறுத்தி, விருத்தாசலம் பாலக்கரை பயணியா் நிழற்குடையில் இருந்த பாமகவின் அடையாளத்தை திமுக அரசு அழிப்பதாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், பயணியா் நிழற்குடையை சீரமைத்து திமுக அரசு அமைத்ததுபோல விளம்பரம் செய்கிறாா்கள் என முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினைரை சமரசப்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

சீரான குடிநீா் விநியோகம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

நெய்வேலி: கடலூா் முதுநகா் அடுத்துள்ள குடிகாடு மேட்டுத் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி செய்து தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: குடிகாடு மேட்டுத் தெருவி... மேலும் பார்க்க

தனியாா் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த நிறுவன தொழிலாளா்கள் தா்னா

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள தனியாா் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த நிறுவனத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். விருத்தாசலத்தை அடுத்துள்ள ஊத்தங்காலில் தனியாா் அனல் ம... மேலும் பார்க்க

மே 1-இல் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவு

நெய்வேலி: தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

சிறுபான்மை நலத் துறை சாா்பில் ரூ.2.79 லட்சம் ஓய்வூதியம் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், சிறுபான்மை நலத் துறை சாா்பில் பணி ஓய்வுபெற்ற 21 பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியத்துக்காக ரூ.2.79 ல... மேலும் பார்க்க

பழுப்பு நிலக்கரி கடத்தல்: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சிறிய சரக்கு வாகனத்தில் பழுப்பு நிலக்கரி கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளா் சந்துரு தலைமையில் போலீஸாா் விருத்த... மேலும் பார்க்க

அரசு பள்ளிக்கு பீரோ, மின்விசிறிகள் அளிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் ரோட்டரி சங்கம் தத்தெடுத்துள்ள கடவாச்சேரி அரசு ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பீரோக்கள், மூன்று மின்விசிறிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க