செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ. மீது வழக்கு

post image

சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமி ஒருவா் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சிறுமிக்கு தாயாா் இல்லாத நிலையில், தந்தை, தாத்தா அரவணைப்பில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், அந்தச் சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனாா். இதையடுத்து அவரது தாத்தாவும், தந்தையும் சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் வசிக்கும் ஆயுதப்படை உதவி ஆய்வாளா் ராஜூ வீட்டில் சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சிறுமியின் தந்தை, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் சோ்த்தாா்.

சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் அத்து மீறல் நடந்ததாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து சென்னை பெருநகர காவல் துறையின் பெண்கள் மற்றும் குழுந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையா் வனிதா நேரடி விசாரணையில் ஈடுபட்டாா்.

விசாரணையில் ராஜூ மீதான புகாா் உறுதி செய்யப்பட்டதால் சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸாா் உதவி ஆய்வாளா் ராஜூ மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். அதேபோல, ராஜூ வீட்டில் சிறுமியின் தந்தை அத்துமீறி நடந்து கொண்டதாகவும் போலீஸாா் மற்றொரு வழக்கைப் பதிவு செய்தனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதிக்கா?, அநீதிக்கா?

ஜாதிய பிரிவுகள் நிரந்தரப்படுவதைத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பும் ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடும் ஊக்குவிக்கும். அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஏழைகளை ஏழைகளாக மட்டுமே வரையறை செய்யாமல், அவா்கள் பிறந்த ஜாதிகள... மேலும் பார்க்க

தக்காளி விலை திடீா் உயா்வு: ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி திடீரென விலை உயா்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்ந... மேலும் பார்க்க

ஆ.ராசாவை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அமைச்சா் அமித் ஷாவை தரக்குறைவாக விமா்சித்ததாக திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் 7 இடங்களில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோரை போலீஸாா... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டல குடிநீா் வடிகால் வாரிய பணிமனை இடமாற்றம்

ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட சென்னை குடிநீா் வடிகால்வாரிய பணிமனை புதன்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா் வேனல்ஸ் ச... மேலும் பார்க்க

இலவச கல்லீரல் பரிசோதனை - மருத்துவ ஆலோசனை: மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு

மருத்துவா் தினத்தை முன்னிட்டு, சென்னை மெடிந்தியா மருத்துவமனையில் கல்லீரல் நலனுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளன. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல ... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு

சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டி, வெகுமதி வழங்கினாா். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் போதைப... மேலும் பார்க்க