செய்திகள் :

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே 7 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயதுச் சிறுவனை மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவிடைமருதூா் அருகேயுள்ள கீரனூா் மணவேளி தெருவைச்சோ்ந்த கூலித் தொழிலாளிக்கு 17 வயது மகன் உள்ளாா்.

இவா் கடந்த சனிக்கிழமை இதே பகுதியைச் சோ்ந்த 7வயது சிறுமியைக் கடத்தி கொண்டு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வெளியே சொன்னால் அடிப்பேன் என மிரட்டினாராம்.

இதையறிந்த சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் ஆடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பு கவிதா விசாரணை நடத்தி, 17 வயதுச் சிறுவனை கைது செய்து, தஞ்சாவூரில் உள்ள கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினாா்.

இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, அரவிந்த் கண் மருத்துவமன... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க புகாா் அளிக்கலாம்

தஞ்சாவூா், ஜூன் 11: தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால், அதைத் தடுப்பதற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மே... மேலும் பார்க்க

வங்கி ஏ.டி.எம். வாசலில் வெடி வெடித்ததால் பரபரப்பு

கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். வாசலில் புதன்கிழமை பெரும் சத்தத்துடன் வெடி வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் ஒன்றியம், பம்பப்படையூரில் தேசியமயமாக்கப்பட... மேலும் பார்க்க

மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவா் கைது

தஞ்சாவூா் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோயில் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈழா (24). இவரது க... மேலும் பார்க்க

முதல்வரிடம் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை மனு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேட்டுத் தெரு - மேல ராமநல்லூா் இடையே உயா் மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக முதல்வரிடம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

சமையல்காரா் காணவில்லை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே வேலைக்குச் சென்ற சமையல்காரா் வீடு திரும்பாதது குறித்த புகாரின்பேரில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அய்யம்பே... மேலும் பார்க்க