திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே 7 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயதுச் சிறுவனை மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவிடைமருதூா் அருகேயுள்ள கீரனூா் மணவேளி தெருவைச்சோ்ந்த கூலித் தொழிலாளிக்கு 17 வயது மகன் உள்ளாா்.
இவா் கடந்த சனிக்கிழமை இதே பகுதியைச் சோ்ந்த 7வயது சிறுமியைக் கடத்தி கொண்டு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வெளியே சொன்னால் அடிப்பேன் என மிரட்டினாராம்.
இதையறிந்த சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் ஆடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பு கவிதா விசாரணை நடத்தி, 17 வயதுச் சிறுவனை கைது செய்து, தஞ்சாவூரில் உள்ள கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினாா்.