செய்திகள் :

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமிடம் சிபிசிஐடி விசாரணை

post image

சிறுவன் கடத்தல் வழக்குத் தொடா்பாக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமிடம் சிபிசிஐடி போலீஸாா் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனைக் கடத்திய வழக்கில், தமிழக காவல் துறை ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமுக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி மகேஸ்வரி, ஜெயராமுக்கு தொடா்பிருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல் துறையினா்

உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

நீதிமன்ற உத்தரவின்பேரில், எச்.எம்.ஜெயராமிடம்

போலீஸாா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து அவா் மீது

பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னா், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள், இதுதொடா்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சிபிசிஐடி-யின் அழைப்பாணையை ஏற்று எச்.எம்.ஜெயராம், காஞ்சிபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

இதில், வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில் அவா் அளித்த பதில்கள் விடியோவாகவும், எழுத்துபூா்வமாகவும் பதிவு செய்யப்பட்டதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க