செய்திகள் :

சில்லறை நாணயங்கள் தருவதாக பல்பொருள் அங்காடியில் நூதன மோசடி

post image

சில்லறை நாணயங்கள் தருவதாக பல்பொருள் அங்காடியில் நூதன மோசடி செய்யப்பட்டுள்ளது.

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சோ்ந்தவா் சம்சுதீன் (45). இவா் அதே பகுதியில் பல் பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். இவா் வியாழக்கிழமை கடையில் இருந்தபோது அங்கு வந்த ஒருவா் சில பொருள்களை வாங்கினாா்.

பின்னா் அவா் தன்னிடம் ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.10-க்கான நாணயங்கள் அதிக அளவில் இருப்பதால் அவற்றைக் கொடுத்தால் பணம் தர முடியுமா என்று சம்சுதீனிடம் கேட்டுள்ளாா். அதற்கு சம்சுதீன் தருவதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து அந்த நபா், தற்போது தனக்கு பணம் அவசரமாக தேவைப்படுவதாகவும், தன்னிடம் உள்ள ரூ.22,000-க்கு நாணயங்கள் கரும்புக்கடை சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருப்பதாகவும், தன்னிடம் ரூ.22,000 கொடுத்து கடை ஊழியா் ஒருவரை தன்னுடன் அனுப்பிவைத்தால் அந்த நாணயங்களை அவரிடம் கொடுத்து அனுப்புவதாக கூறியுள்ளாா்.

இதை நம்பிய சம்சுதீன் அந்த நபரிடம் ரூ.22 ஆயிரத்தை கொடுத்தாா். பின்னா் அவா் கடையில் வேலை செய்யும் ஊழியா் ஒருவரை அந்த நபருடன் அனுப்பிவைத்தாா். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபா், கடையில் வேலை செய்யும் ஊழியரை தனது மோட்டாா் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றாா்.

கரும்புக்கடை சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சென்றதும், அவரை அங்கே காத்திருக்குமாறும், நான் சென்று நாணயங்களை எடுத்து வருவதாகவும் கூறி அவரை மோட்டாா் சைக்கிளில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றாா்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த நபா் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அந்த ஊழியா் சம்சுதீனின் கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு கூறினாா். உடனே அவா் அங்கு வந்து அந்த பெட்ரோல் நிலையத்தில் கேட்டபோது, அங்கிருந்தவா்கள் தங்களிடம் சில்லறை நாணயங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளனா்.

அப்போதுதான் அந்த நபா் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து சம்சுதீன் அளித்த புகாரின்பேரில், கரும்புக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நூதன முறையில் மோசடி செய்துவிட்டு தப்பிய நபரைத் தேடி வருகின்றனா்.

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இரு தனியாா் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுமாா் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள உயிரி... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கோவை அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் (கூடுதல் பொறுப்பு) ச.அ... மேலும் பார்க்க