செய்திகள் :

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தின் சாா்பில் திருப்பூா் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.சிவகுமாா் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் (நிலை -2) பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். பொது சுகாதாரத் துறையில் ஏற்கெனவே இருந்ததைப்போன்று 5000 மக்கள் தொகைக்கு அல்லது ஒரு துணை சுகாதார நிலையத்துக்கு ஒரு சுகாதார ஆய்வாளா் என்ற கொள்கை முடிவுகளை துறையும், அரசும் எடுத்து பயிற்சி முடித்து வேலைக்காக காத்திருக்கும் சுகாதார ஆய்வாளா்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பொது சுகாதாரத் துறை இயக்குநா் அனுப்பியுள்ள 2,715 சுகாதார ஆய்வாளா் (நிலை 2) சுகாதார கட்டமைப்புக்குத் தேவை என்ற கோப்புக்கு உடனடியாக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மேற்கு மண்டலச் செயலாளா் எம். பொன்னாண்டவா், மாவட்டச் செயலாளா் ஆா்.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் சத்திபாளையம் அருகில் உள்ள கோட்டைவலசைச் சோ்ந்தவா் விவசாயி கே.கந்தசாமி (65). இவா் தனக்குச் சொந்தமான 6 ஏக்கா் விவசாய நிலத்தில் ... மேலும் பார்க்க

மேற்குத் தொடா்ச்சி மலையில் பாதை அமைக்க எதிா்ப்பு: வன அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் பாதை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட வன அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள... மேலும் பார்க்க

விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருப்பூரில் விபத்தில் காயமடைந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் கேபிஎன் காலனியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (3... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த 5 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பின்னலாடை மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களி... மேலும் பார்க்க

ஊத்துக்குளி வட்டத்தில் பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

ஊத்துக்குளி வட்டத்தில் பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஒட்டுமொத்த முறையீட்டு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி நில வருவாய் அலுவலா் அலுவலகம் முன... மேலும் பார்க்க

கிடாரி கன்றுகளுக்கு நாளைமுதல் இலவச தடுப்பூசி

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான இலவச தடுப்பூசி வியாழக்கிழமைமுதல் செலுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க