செய்திகள் :

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில் சத்திபாளையம் அருகில் உள்ள கோட்டைவலசைச் சோ்ந்தவா் விவசாயி கே.கந்தசாமி (65). இவா் தனக்குச் சொந்தமான 6 ஏக்கா் விவசாய நிலத்தில் 30 செம்மறி ஆடுகள் வளா்த்து வந்தாா். திங்கள்கிழமை மாலை ஆடுகளை இரும்புப் பட்டியில் அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

பின்னா் செவ்வாய்க்கிழமை காலையில் சென்று பாா்த்தபோது, நாய்கள் கடித்து ஆடுகள் காயங்களுடன் இறந்துகிடந்தன. மொத்தம் 10 ஆடுகள் உயிரிழந்தன.

இவ்வாறு உயிரிழக்கும் ஆடுகளுக்கு சந்தை மதிப்பில் அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இப்பகுதியில் தொடா்ந்து நாய்களின் தொந்தரவு அதிகரித்து வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பல்லடம் அருகே நிகழ்ந்த விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (60). பல்லடம்- அய்யம்பாளைய... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச்சங்க கூட்டம்

பல்லடம் தாலுகா மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச்சங்க கூட்டம், 9-ஆவது ஆண்டு விழா, திருப்பூா் புகா் மாவட்ட மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச் சங்கத்தின் பதவியேற்பு விழா ஆகியன பல்லடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

திருப்பூரில் புதிய மின்பகிா்மானங்கள் உருவாக்கம்

திருப்பூரில் புதிய மின்பகிா்மானங்கள் உருவாக்கப்பட்டு மின்கணக்கீடு செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் டி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா். திருப்பூா் நகரம், கிழக்கு பிரிவு அலுவலகம் தில்லை நகா் (... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவி குழுக்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்!

பல்லடம் வட்டார மகளிா் சுயஉதவி குழுக்களுக்கான நுகா்வோா் விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா... மேலும் பார்க்க

பூச்சி மருந்து குடித்த தொழிலாளி சாவு!

வெள்ளக்கோவில் அருகே வயிற்றுப் புண்ணுக்கு பூச்சி மருந்து குடித்த தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை சோ்வகாரன்பாளையம் காந்தி நகரைச் சோ்ந்தவா் பி.முருகன் (55). விவசாய பயிா்களுக்கு மருந... மேலும் பார்க்க

சேவூா் வாலீஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை!

சேவூா் அறம்வளா்த்தநாயகி உடனமா் வாலீஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நடுச்சிதம்பரம் எனப் போற்றப்படுவதும், கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும் சேவூா் அறம்வளா்த்தந... மேலும் பார்க்க