செய்திகள் :

சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி போராட்டம்

post image

திருவள்ளூா் அருகே ஆறுவழிச்சாலை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் அந்த வழியாக தண்ணீா்குளம் கிராமத்துக்கு வாகனங்கள் சென்றுவர சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டையை அடுத்த தண்ணீா்குளம் பகுதியில் திருநின்றவூா் முதல் ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா வரை ஆறு வழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூா், காக்களூா் பகுதியில் இருந்து தண்ணீா்குளம் வழியாக கிளாம்பாக்கம், தொட்டிகலை, ஆயலூா் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவம் மற்றும் பிற பணிகளுக்கு நூற்றுக்கணக்கானோா் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், அந்த வழியே பள்ளி, கல்லூரி மற்றும் தனியாா் தொழிற்சாலை வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையே அப்பகுதியில் ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், தற்போதுள்ள பாதையை அடைத்து மாற்று வழியாக அரை கி.மீ. தொலைவில் மேம்பாலத்தின் கீழ் பாதை அமைத்து தருவதாக கூறியுள்ளனா். இது தொடா்பாக ஏற்கெனவே உயா் அதிகாரிகள், ஆட்சியா், நெடுஞ்சாலைத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா். ஆனாலும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் பணிகள் தீவிரமாக நடைபெறுவதால், அதற்கான வழி இல்லை எனத் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், தற்போது பயன்படுத்தி வரும் வழியிலேயே சுரங்கப்பாதை அமைத்துத் தரக்கோரி, அந்தப் பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் சாலைப் பணிகளுக்காக மண் எடுத்துச் செல்லும் லாரிகளை சிறைபிடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த செவ்வாப்பேட்டை போலீஸாா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது உயா் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு நடத்தி இதற்கான தீா்வு காணப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க