செய்திகள் :

சென்னையிலிருந்து லக்னௌ புறப்பட்ட விமானம் பாதி வழியில் திரும்பியது: அவசரமாக தரையிறக்கம்!

post image

சென்னை: சென்னையிலிருந்து உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌக்குப் புறப்பட்ட விமானம் இன்று(மே 27) காலை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னையிலிருந்து 160 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை(மே 27) அதிகாலை 5.40 மணிக்கு லக்னௌக்கு புறப்பட்டது. இந்த நிலையில், நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது அந்த விமானத்திலிருந்த பயணி ஒருவருக்கு உடல்நலக் குறைவால் அவசரமாக மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் நிலை உருவானது.

இதனையடுத்து, இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதன்பின், அந்த விமானம் காலை 6.30 மணிக்கு சென்னையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

விமான நிலையத்தில் தயார் நிலையிலிருந்த மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்ட பயணிக்கு மருத்துவ முதலுதவி சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர். அதன்பின் அந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து, காலை 7.20 மணிக்கு அந்த விமானம் மீண்டும் லக்னௌக்கு புறப்பட்டுச் சென்றது.

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்... மேலும் பார்க்க

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்

கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக... மேலும் பார்க்க

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க