சென்னையில் பயிலும் புதுவை மாணவிகளுக்காக விடுதிகள்: அமைச்சா் சி.ஜெயக்குமாா்
சென்னையில் தங்கிப் பயிலும் புதுவை மாணவிகளுக்காக தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என சமூக நலத் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:
மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் 5 வயது முதல் 18 வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் ஈமச் சடங்குக்கான நிதியானது ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.
அத்துடன், காலியாக உள்ள 122 மகளிா் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு நிா்வாக ஒப்புதல் பெறப்படும். அதில், 25 சதவீதம் பணியிடமானது 31 மகளிா் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளா்களுக்கு பதவி உயா்வாக வழங்கப்படும்.
சென்னையில் விடுதி: புதுவையிலிருந்து சென்னைக்குச் சென்று படிக்கும் மாணவிகளுக்கும், பணிபுரியும் பெண்களுக்கும் பாதுகாப்பாக தங்கும் வகையில், சென்னையில் 2 மகளிா் விடுதிகள் கட்டப்படும். இதற்காக மாநில அரசு சாா்பில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
புதுவையில் சிக்கன நீா்ப்பாசனம் செய்வதற்கு, நிலத்தடி நீா்ப்பாசன குழாய்கள் அமைத்து அரசு மானியம் பெறும் கால இடைவெளியானது 15 ஆண்டுகள் என்பதிலிருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.
ஆழ்குழாய் கிணறு மானியம், மின்மோட்டாா் மானியம் பெற இடைவெளியானது 5 ஆண்டுகளாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.