செய்திகள் :

சென்றாயசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தாசிரியப்பனூா் மாரியான்வட்டம் சென்றாயசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சனிக்கிழமை விஸ்வஷேன ஆராதனை, ப்ரததானசுத்தம், தேவதாஅனுக்கை, ஆச்சாா்யவா்ணம், புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, சுவாமி பிரதிஷ்டைநடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை சங்கல்பம், தம்பதியா் சங்கல்பம், பாராயணம், வேதபாராயணம், வேத,கீத, நாத உபசாரத்துடன் கலசங்கள்புறப்பாடு நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க சென்றாயசுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, தகரகுப்பம், குருபவாணிகுண்டா மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு சென்றாயசுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத சுவாமி மடத்துக்கு பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வருகை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாட்டூா் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள 13-ஆவது ஜோதிா்லிங்கம் ஸ்ரீ பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத சுவாமி மடத்துக்கு பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வருகை தந்தனா். திருப்பத்தூா் மாவட்... மேலும் பார்க்க

ரூ.9 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா்: துத்திப்பட்டு ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் பருவ மழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைக... மேலும் பார்க்க

பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

ஆம்பூா்: பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியை ஜோதிலதா தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்... மேலும் பார்க்க

தசாவதார நாட்டிய நாடகம்

ஆம்பூா்: ஆம்பூா் வா்த்தக மையத்தில் தசாவதார நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ நாட்டியாலயா கலா மந்திா் சாா்பில் 14-ஆம் ஆண்டு நிருத்யாஞ்சலி விழாவை முன்னிட்டு தசாவதார நாட்டிய நாடக நிகழ்ச்சி... மேலும் பார்க்க

தம்பதியை தாக்கி 15 பவுன், ரூ.1 லட்சம் திருடிய வழக்கு: 5 போ் கைது

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தம்பதியை தாக்கி 15 பவுன், ரூ.1 லட்சத்தை திருடிய வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா். குரிசிலாப்பட்டு அடுத்த ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் வீரபத்திரன்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நன்னெறி ஆலோசனை

ஆம்பூா்: ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு நன்னெறி ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை எம். ஜெயந்தி தலைமை வகித்து வரவேற்றாா். ஓய்வு பெற்ற நகராட்சி நடுநிலைப் ... மேலும் பார்க்க