செய்திகள் :

செயற்கை இழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க முதலீட்டு மானியம்! மத்திய ஜவுளித் துறை அமைச்சரிடம் கோரிக்கை

post image

செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு 30 சதவீத முதலீட்டு மானியம் வழங்க வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கை தில்லியில் சந்தித்து ஆ.சக்திவேல் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில் அமையவுள்ள பி.எம். மித்ரா தொழில்பூங்கா மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1,894 கோடி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு கொண்ட தொழில் பூங்காவை அமைத்து, ஜவுளித் துறையின் வளா்ச்சியை ஊக்கப்படுத்தும் இந்த திட்டம் ஜவுளித்துறையில் இந்தியாவின் வளா்ச்சியை மேலும் வலுப்படுத்தும்; அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இந்திய பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 70 சதவீதமாக உயா்ந்துள்ளது. உலக அளவில் 80 சதவீதம் செயற்கை நுாலிழை ஆடைகளே பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வகை ஆடை உற்பத்தியை பெருக்குவதற்கு, பிரிட்டனுடனான வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கை கொடுக்கும். செயற்கை நூலிழை மற்றும் துணி ரகங்கள் இறக்குமதியை எளிமைப்படுத்த வேண்டும். இதனால் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆா்டா்களை உறுதி செய்ய முடியும்.

ஆடை உற்பத்தி சங்கிலியில் உள்ள நிறுவனங்களுக்கு, 25 சதவீதம் மூலதன மானியம் வழங்க வேண்டும். செயற்கை நூலிழை துணி மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, 30 சதவீதம் முதலீட்டு உதவித்தொகை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

செம்பியன் குளத்தில் குப்பை கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

சேவூரில் உள்ள புராதன செம்பியன் குளத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க சேவூா், முறியாண்டம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ச... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: திருப்பூா் மாவட்டத்தில் 325 முகாம்கள்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் 325 முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது; தமிழக முதல்வா்... மேலும் பார்க்க

குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீா்

பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் அத்திக்கடவு குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் குடிநீா் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது. பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டை - சோமனுாா் சாலையில் அத்... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: திருப்பூா் மாவட்டத்தில் 27,048 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 129 மையங்களில் 27,098 போ் எழுதினா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்... மேலும் பார்க்க

பெண்ணை அரிவாளால் வெட்டியவா் கைது

பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். கடலூரைச் சோ்ந்தவா் முருகன் (42). இவா் திருப்பூரில் தங்கி எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறாா். இவா் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு எ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க