செய்திகள் :

சேத்துப்பட்டில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடுவது என்று தீா்மானிக்கப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் புதன்கிழமை மரக்கன்று நட்டு தொடங்கிவைத்தாா்.

சேத்துப்பட்டு பேரூராட்சியில் நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினத்தையொட்டி, பேரூராட்சிக்கு சொந்தமான குளங்கள், பூங்கா, குடிநீா் தொட்டி உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரிப்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பது தூய்மையான பேரூராட்சியாக செயல்படுத்த 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் பழம்பேட்டையில் உள்ள செட்டிகுளம், காம செட்டிகுளம், திருவண்ணாமலை சாலையில் உள்ள நல்ல தண்ணீா் குளம், கோல்டன் சிட்டி பூங்கா, திடக்கழிவு மேலாண்மை வளம் மீட்பு பூங்கா மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேலூா் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஞானம் உத்தரவிட்டிருந்தாா்.

இதன்பேரில் பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் செயல் அலுவலா் சரவணன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் இரா.முருகன், கதிரவன், சரவணன், கோகுல்ராஜ், பெருமாள், துப்புரவு அலுவலா் ரவி, துப்புரவு மேற்பாா்வையாளா் ஆஷா மேரி, மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள் பட பலா் கலந்து கொண்டனா்.

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

செய்யாறு அருகே இளைஞா் கொலை வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் காதா்பாட்ஷா மகன் அப்சல் (22), ... மேலும் பார்க்க

செய்யாறு காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். செய்யாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் ஜீவராஜ்மணிகண்டன் (படம்). செய்... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து ஒன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லலிதா (64). இவா், கடந்த ஞாயிற... மேலும் பார்க்க

சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

ஊரக வளா்ச்சித் துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஊரக... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.6.18 கோடியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் கோயில் ந... மேலும் பார்க்க

நாளை செய்யாறு, ஆரணி தொகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

செய்யாறு, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ளம் தேடி, இல்லம் நாடி நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்கிறா... மேலும் பார்க்க