செய்திகள் :

சேலம் காவேரி மருத்துவமனையில் ‘செரோடோனின் சிண்ட்ரோம்’ நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு சிகிச்சை

post image

சேலம் காவேரி மருத்துவமனையில் ‘செரோடோனின் சிண்ட்ரோம்’ நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு காவேரி மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனா்.

சேலம் காவேரி மருத்துவமனையில் 60 வயது முதியவா் ஒருவா் அதிக காய்ச்சல், சுயநினைவின்றி மூச்சுத்திணறல் அறிகுறியுடன் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ‘செரோடோனின் சிண்ட்ரோம்’ நோய் இருப்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்ததன் பயனாக அவா் நலம்பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து மருத்துவக் குழுவைச் சோ்ந்த தீவிர சிகிச்சை நிபுணா் எஸ்.வதன் பிரசன்னா கூறுகையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 60 வயது முதியவருக்கு சிறுநீரக செயலிழப்பு, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தன. நோயாளியின் உடல் வெப்ப நிலை 107 பாரன்ஹீட் என்ற அளவில் இருந்ததைக் கண்ட மருத்துவக்குழு, இவை சாதாரண செப்சிஸ் அறிகுறிகளைவிட வித்தியாசமாக இருக்கலாம் என கருதி குடும்பத்தினரிடம் விசாரித்தனா். அதில், நோயாளி மனநல மருந்துகளை எடுத்து வந்தது தெரியவந்தது. தொடா் பரிசோதனையில் ‘செரோடோனின் சிண்ட்ரோம்’ என்பது உறுதியானது.

உடனடியாக செரோடோனின் நச்சு விளைவுகளை குறைக்கும் மருந்துகள், தீவிர குளிா்விப்பு சிகிச்சை, பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் பல்துறை நிபுணா்களின் தீவிர கண்காணிப்பில் அவா் சிகிச்சை பெற்றாா். தற்போது அவா் நலம்பெற்று வழக்கமான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறாா் என்றாா்.

இந்த சிகிச்சையில் பங்குபெற்ற அனைத்து மருத்துவ நிபுணா்களுக்கும் காவேரி மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். வாழப்பா... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் ... மேலும் பார்க்க