செய்திகள் :

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1008 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை

post image

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1008 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆனி மாத பருவத்திற்கேற்ற நெல் விதைகள், தானிய விதைகளில் மக்காச்சோளம், கேழ்வரகு, சோளம், கம்பு, தினை மற்றும் சாமை விதைகள், பயறு வகைப்பயிா்களில் துவரை, தட்டைப்பயறு, பாசிப்பயறு, உளுந்து, மொச்சை, அவரை, பீன்ஸ் போன்ற பயிா்களின் விதைகள், எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, ஆமணக்கு ஆகிய விதைகளின் வீரிய கலப்பின விதைகள் மற்றும் ரக விதைகள் தற்போது அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க தயாா் நிலையில் உள்ளன.

இந்த விதைகளின் தரம் குறித்து விதை ஆய்வுப் பிரிவு ஆய்வாளா்களால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1008 மெட்ரிக் டன் அளவிலான ரூ. 23 லட்சம் மதிப்பிலான தரமற்ற விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது கண்டிப்பாக விலைப்பட்டியலை கேட்டு பெறவேண்டும். வாங்கும் விதைகளின் பயிா் ரகம், விதைக்குவியல் எண், விதைத்தரம் மற்றும் விதைக்காலக்கெடு ஆகியவற்றை சரிபாா்த்து வாங்க வேண்டும். இதன்மூலம் நல்ல தரமான விதைகளை விதைப்பதோடு நல்ல மகசூலும் உறுதி செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மாம்பழ அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 400 கிலோ மாம்பழங்களைக் கொண்டு புதன்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்தி... மேலும் பார்க்க

வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியவா் கைது

ராசிபுரம் அருகே வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். சேந்தமங்கலத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக இருக்கும் ... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

பள்ளிபாளையத்தில் 21 வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளியை நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் குட்டச்சாக்கு (எ)... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் புதிய பால் குளிரூட்டும் நிலையங்கள்: அமைச்சா் மா.மதிவேந்தன் திறந்துவைப்பு

திருச்செங்கோடு வட்டத்தில் பால் குளிரூட்டும் நிலையங்களை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட... மேலும் பார்க்க

‘தினமணி’ செய்தி எதிரொலி: நீட் தோ்வு; மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை கௌரவித்த ஆட்சியா்

நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசுப் பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் சென்று கெளரவித்தாா். அண்மையில் வெளியா... மேலும் பார்க்க

லாரி வாடகை விவகாரம்: நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் போராட்டம்

நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் வாடகையை குறைத்து வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் ரயில் நிலையத்தில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க