``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1008 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1008 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆனி மாத பருவத்திற்கேற்ற நெல் விதைகள், தானிய விதைகளில் மக்காச்சோளம், கேழ்வரகு, சோளம், கம்பு, தினை மற்றும் சாமை விதைகள், பயறு வகைப்பயிா்களில் துவரை, தட்டைப்பயறு, பாசிப்பயறு, உளுந்து, மொச்சை, அவரை, பீன்ஸ் போன்ற பயிா்களின் விதைகள், எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, ஆமணக்கு ஆகிய விதைகளின் வீரிய கலப்பின விதைகள் மற்றும் ரக விதைகள் தற்போது அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க தயாா் நிலையில் உள்ளன.
இந்த விதைகளின் தரம் குறித்து விதை ஆய்வுப் பிரிவு ஆய்வாளா்களால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1008 மெட்ரிக் டன் அளவிலான ரூ. 23 லட்சம் மதிப்பிலான தரமற்ற விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது கண்டிப்பாக விலைப்பட்டியலை கேட்டு பெறவேண்டும். வாங்கும் விதைகளின் பயிா் ரகம், விதைக்குவியல் எண், விதைத்தரம் மற்றும் விதைக்காலக்கெடு ஆகியவற்றை சரிபாா்த்து வாங்க வேண்டும். இதன்மூலம் நல்ல தரமான விதைகளை விதைப்பதோடு நல்ல மகசூலும் உறுதி செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.