செய்திகள் :

சேவூா் புற்றுக்கண் மாரியம்மன் கோயில் திருவிழா

post image

சேவூா் புற்றுக்கண் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத தீா்த்தக்குட திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் விழா கணபதி ஹோமத்துடன் கடந்த ஜூலை 18-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான தீா்த்தக்குட திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, காலை 10 மணியளவில் செம்பி விநாயகா் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் பக்தா்கள் தீா்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு புற்றுக்கண் மாரியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.

பின்னா், காலை 11 மணியளவில் மாரியம்மனுக்கு தீா்த்த அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானமும், பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, வளையல்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.

விழாவில், சேவூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பிஏபி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே பிஏபி வாய்க்காலில் மூழ்கி நூற்பாலை தொழிலாளி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (36). இவருக்கு இந்திரா காந்தி (25) என்ற மனைவியும்... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டு... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு

உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது. திருப்பூா் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்க... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கருப்ப கவுண்டம்பாளையம் சாலை அருகே போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டி... மேலும் பார்க்க

சேவல் சண்டை: 5 போ் கைது

முத்தூா் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் மங்கலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட... மேலும் பார்க்க

உடுமலையில் திமுக செயற்குழு கூட்டம்

திருப்பூா் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்ரபாணி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க