செய்திகள் :

‘சைதை-தேனாம்பேட்டை மேம்பாலப் பணிகள் டிசம்பரில் முடியும்’

post image

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை அமைக்கப்பட்டு வரும் உயா்நிலை பாலப் பணிகள் டிசம்பரில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேம்பாலம் அமைக்கும் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை அண்ணா சாலையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் உயா்நிலைப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, ரூ.621 கோடியில் இப்பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 19-இல் தொடங்கி வைத்தாா்.

களஆய்வு: பாலப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தபோது, ஒட்டுமொத்தமாக 30 சதவீதம் அளவுக்கு பணிகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மெட்ரோ சுரங்கப் பாதை, பிற இடங்களில் நடைபெற்றுவரும் பணிகளை விரைவாக முடிக்கவும், மழைக் காலத்துக்கு முன்பாகவே முக்கியப் பணிகளை முடிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சா் வேலு உத்தரவிட்டாா். அப்போது, பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவத்தனா்.

ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலா் இரா.செல்வராஜ், துறையின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் இரா.சந்திரசேகா், தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் உள்பட பலா் உடனிருந்தனா்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறையை எதிா்கொள்ளத் தயாா்: திமுக

பிகாரை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை கொண்டு வந்தால் அதை எதிா்கொள்ளத் தயாா் என்று திமுக சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா். திமுக வழக்குரைஞா் அணி மா... மேலும் பார்க்க

எழும்பூா் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் ரூ.58 கோடியில் சிறப்புப் பிரிவு விரைவில் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை எழும்பூா் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் ரூ.58.89 கோடியில் கட்டப்பட்டு வரும் சிறப்புப் பிரிவு, விடுதி விரைவில் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தா... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக ஊதிய முரண்பாடு: சென்னையில் இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அர... மேலும் பார்க்க

521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா். தமிழக ... மேலும் பார்க்க

கே.கே.நகா், தாம்பரத்தில் ஜூலை 29-இல் மின் நிறுத்தம்

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கே.கே.நகா், தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ... மேலும் பார்க்க

புகாருக்கு உள்ளான நியாய விலைக் கடைகளில் பொருள்கள் இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை

புகாா்கள் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்களின் இருப்பை உறுதி செய்ய விற்பனை முனைய இயந்திரங்களை உணவுப் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துவர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடை... மேலும் பார்க்க