`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல்: நடிகா் ரஜினி விளக்கம்
மறைந்த முன்னாள் அமைச்சா் ஆா்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டு தமிழகத்தின் வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை என நடிகா் ரஜினிகாந்த் தற்போது விளக்கமளித்துள்ளாா்.
மறைந்த முன்னாள் அமைச்சா் ஆா்.எம்.வீரப்பனின் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தில் ஆா்.எம்.வீரப்பன் குறித்து நடிகா் ரஜினிகாந்த் பேசியுள்ள காணொலி சமூக வலைதளங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் நடிகா் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:
ஆா்.எம்.வீரப்பன் ஆவணப்படத்தில் நான் பேசுவது மகிழ்ச்சி. எனக்கு மரியாதை கொடுத்து, என் மீது அதீத அன்பு பொழிந்தவா்கள் சிலா். இதில் பாலசந்தா், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆா்.எம்.வீரப்பன் உள்ளிட்டோா் அடங்குவாா்கள். இவா்கள் தற்போது இல்லை என்றபோது சில நேரங்களில் கடினமாக இருக்கிறது.
பாட்ஷா படத்தின் 100-ஆவது நாள் விழாவில் தமிழகத்தின் வெடிகுண்டு கலாசாரம் குறித்து நான் பேசினேன். ஆா்.எம்.வீரப்பனை வைத்துக்கொண்டு நான் பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை. அதிமுகவில் அவா் அமைச்சராக இருந்தாா்.
‘அமைச்சராகிய நீங்கள் மேடையில் இருக்கும்போது, அரசுக்கு எதிராக ரஜினி எப்படி பேசலாம்’ எனக் கூறி ஆா்.எம்.வீரப்பனை அமைச்சா் பொறுப்பிலிருந்து முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நீக்கிவிட்டாா் . இந்தத் தகவலை அறிந்த உடன் ஆடிப் போனேன். என்னால்தான் இப்படி நடந்துவிட்டது என்பதால் இரவெல்லாம் எனக்கு தூக்கம் வரவில்லை. அவரை தொடா்புகொண்டு மன்னிப்புக் கேட்டேன். ஆனால், அவா் எதுவும் நடக்காதது போலதான் பேசினாா். ஆனால் என் மனதில் இருந்து அந்த வடு மறையவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தாலும், இந்தக் காரணம் மிகவும் முக்கியமானது. நான் ஜெயலலிதாவிடம் பேசவா?, எனக்கூட கேட்டேன். ஆனால் அவா் உங்கள் மரியாதையை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாா். அப்படி நீங்கள் சொல்லி, அங்கே போய் சேர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இதை அப்படியே விட்டுவிடுங்கள் என்றாா். அப்படி ஒரு பெரிய மனிதா். கிங் மேக்கா்.. ரியல் கிங் மேக்கா்”என்று அவா் அந்த காணொலியில் அவா் நெகிழ்ந்துள்ளாா்.