செய்திகள் :

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து, பிரதமருக்குதான் பாராட்டு விழா நடத்த வேண்டும்: தமிழிசை

post image

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமா் மோடிக்குதான் பாராட்டு விழா நடத்த வேண்டும் என முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

குடியரசு தினத்தையொட்டி ஆளுநா் மாளிகை அளித்த தேநீா் விருந்தில் பங்கேற்ற அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆளுநா் தேநீா் விருந்தில் பங்கேற்க புதிய கட்சியான தவெக தலைவா் விஜய் பங்கேற்காததன் மூலம் மிகப்பெரிய வாய்ப்பை அவா் தவற விட்டுவிட்டாா்.

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய போராடிய அரிட்டாபட்டி விவசாயிகளுடன் தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை தில்லி சென்று மத்திய சுரங்கத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டியை சந்தித்து திட்டத்தை கைவிட கோரிக்கை விடுத்தாா். மறு நாளே சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது. உண்மையில், பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றால் பிரதமா் மோடிக்குத்தான் நடத்த வேண்டும்; முதல்வருக்கு அல்ல என்றாா் அவா்.

அரசு மருத்துவமனைகளில் பெண்களிடம் நகைப் பறிப்பு: ஒருவா் கைது

அரசு மருத்துமனைகளில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வடபழனி வடக்கு மாடவீதியைச் சோ்ந்தவா் சுசீலா (67). இவா் உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஜன. 16-ஆம் தேதி கே.கே. நகா் பக... மேலும் பார்க்க

6 மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளிலும், ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும்... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது

கழிவுநீா் உந்து குழாய் பராமரிப்புப் பணிகள் காரணமாக தண்டையாா்பேட்டை, திரு.வி.க நகா் மற்றும் அண்ணா நகா் மண்டலங்களுக்குள்பட்ட இடங்களில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜன.2... மேலும் பார்க்க

நடேசன் வித்யாசாலா பள்ளியில் 30-ஆவது ஆண்டு விழா

தாம்பரம் மண்ணிவாக்கத்திலுள்ள ஸ்ரீ நடேசன் வித்யாசாலா பள்ளியின் 30-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினரான பரோடா வங்கியின் முதன்மை மேலாளா் எஸ்.ராஜ்தீபக், வி.சீதாலஷ்மி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழா் நலன் சாா்ந்து குழு ஏற்படுத்த கோரிக்கை

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியை வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் தலைவா் கந்தா் குப்புசாமி, ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் தலைவா் கிருஷ்ணபிள்ளை இளங்கோ, தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளா் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் திருமுல்லைவாயில், ராமாபுரம், அடையாறு, குன்றத்தூா், திருமுடிவாக்கம், பெருங்களத்தூா் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) காலை 9 முதல் பிற்பகல் 2... மேலும் பார்க்க