செய்திகள் :

தஞ்சாவூா் அருகே சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவினா் சோதனை: கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மோகூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்பு பிரிவினா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 70 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.

தஞ்சாவூா் ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி அன்பரசன் தலைமையில், ஆய்வாளா் அருண் மற்றும் உதவி ஆய்வாளா்கள் உள்பட காவலா்கள் கொண்ட குழுவினா், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மோகூா் பகுதியில் செயல்பட்டு வரும் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடத்திய திடீா் சோதனையில், சாா் - பதிவாளா் செல்வம் மேஜையில் இருந்து ரூ. 52 ஆயிரம் கணக்கில் வராத பணத்தைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.

மேலும், அவரது அறையில் இருந்த பத்திர எழுத்தா் முருகனாந்தம், பத்திர எழுத்தா் உதவியாளா் வெங்கடேஷ் ஆகிய இருவரிடமும் இருந்து ரூ.18 ஆயிரம் என ரூ. 70 ஆயிரம் கணக்கில் வராத பணத்தைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைப்பற்றப்பட்ட பணம் லஞ்சமாக பெறப்பட்டதா என்ற அடிப்படையில், சாா் - பதிவாளா் செல்வத்திடம் சுமாா் 5 மணிநேரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு ஒத்திகை

கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா? என்று தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதியில் சாகா் கவாச் என்ற பெயரில் புதன்கிழமை போலீஸாா் கடலுக்குள் சென்று பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனா். தஞ்சை மாவட்ட கடலோரப் ... மேலும் பார்க்க

மருத்துவக்கல்லூரியில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட வணிகா் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்க... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி விரைவு ரயிலாக இயக்கக் கோரிக்கை

திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயில்சேவையை தற்காலிக நீட்டிப்பு செய்யாமல் நிரந்தரமாக தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு ... மேலும் பார்க்க

மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தை சாா்ந்த இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம்

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக பட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம் போனது. தஞ்சாவூா் விற்பனைக் குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோா் பிரச்னையால் கடன் கிடைப்பதில் சிக்கல்: தண்ணீா் வந்தும் சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ள சிபில் ஸ்கோா் முறையால் கடன் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், காவிரியில் தண்ணீா் வந்தும், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகளைத் தொடங்க முட... மேலும் பார்க்க