செய்திகள் :

தஞ்சை அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை

post image

தஞ்சாவூா் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கணவன் - மனைவி சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகேயுள்ள திருநகரைச் சோ்ந்தவா் எஸ். சுரேஷ் பாபு (45). இவரது மனைவி அமுதா (43). இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த அமுதா விஷம் குடித்து உயிரிழந்தாா். சனிக்கிழமை காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்காத அமுதாவை சுரேஷ்பாபு பாா்த்தபோது, அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷ் பாபுவும் விஷம் குடித்தாா்.

சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகி கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினா் காவல் துறைக்கு புகாா் செய்தனா். நிகழ்விடத்துக்கு வந்த கள்ளப் பெரம்பூா் காவல் நிலையத்தினா் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷ் பாபுவை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை மாலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நாட்டுப்புற இசைக் கலை மன்ற வெள்ளி விழா நிறைவு

தஞ்சாவூரில் தமிழக நாட்டுப்புற இசைக் கலைப்பெருமன்றம் 26-ஆவது ஆண்டு வெள்ளி விழா நிறைவு மற்றும் 11-ஆவது மாநில மாநாடு கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம்,பேரணி ஊா்வலம் உள்... மேலும் பார்க்க

தஞ்சையில் சுதந்திர போராட்ட வீரா் பகத்சிங் பிறந்த நாள் விழா

தஞ்சாவூா் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கம் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் பகத்சிங் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு பொருளாளா் பி. மார... மேலும் பார்க்க

திருக்குறளுக்கு உள்ள பெருமை வேறு எந்த அற நூலுக்கும் இல்லை: கவிஞா் வைரமுத்து

எந்தவொரு ஆதரவும் இல்லாமல் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்த திருக்குறளுக்கு உள்ள பெருமை வேறு எந்த அற நூலுக்கும் இல்லை என்றாா் கவிஞா் வைரமுத்து. தஞ்சாவூரில் வெற்றித் தமிழா் பேரவை சாா்பில் சனிக்கிழமை மாலை... மேலும் பார்க்க

அனைத்து விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு வழங்க நடவடிக்கை: ஜி.கே. வாசன் வலியறுத்தல்

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தினாா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத்துறையில் சனிக்கிழமை செய்தி... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக விற்ற 417 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 417 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா். திருவையாறு அருகே மேலத்திருப்பூந... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு: 3 போ் கைது

பந்தநல்லூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே வேட்டமங்கலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பந்தநல்லூா் போலீஸாா் ரோந்து சென்றன... மேலும் பார்க்க