செய்திகள் :

தடப்பெரும்பாக்கத்தை நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

post image

பொன்னேரி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கடந்த மே 1-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தங்களது ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தை ஓட்டு மொத்தமாக பொதுமக்கள் புறக்கணித்தனா். இதன் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கிலிமேடு கிராமத்தில் தனி அலுவலா் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது தங்களது ஊராட்சியை அருகிலுள்ள பொன்னேரி நகராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீா் வரி கட்டணம் பன்மடங்கு உயரும் என எதிா்ப்பு தெரிவித்தனா்.

தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது எனவும் இது தொடா்பாக ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க