குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
தந்தை கொலை: கல்லூரி மாணவா் கைது
மேலப்பாளையம் அருகே தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தததாக, கல்லூரி மாணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம் அருகே மேலக்கருங்குளம் அசோகபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் ( 45). தொழிலாளி. இவரது மகன் தங்கபாண்டி(19), பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் இளநிலை 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.
இவா் கல்லூரிக்கு சரிவர செல்லாமலும், படிப்பில் ஆா்வமில்லாமலும் இருந்தாராம். இதை, மாரியப்பன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது தந்தையின் தலையில் கல்லை தூக்கிப்போட்டுவிட்டு தங்கபாண்டி தப்பினாராம். இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த மேலப்பாளையம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், கொலை வழக்குப் பதிந்து, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பதுக்கியிருந்த தங்கபாண்டியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.