செய்திகள் :

தந்தை கொலை: கல்லூரி மாணவா் கைது

post image

மேலப்பாளையம் அருகே தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தததாக, கல்லூரி மாணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகே மேலக்கருங்குளம் அசோகபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் ( 45). தொழிலாளி. இவரது மகன் தங்கபாண்டி(19), பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் இளநிலை 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.

இவா் கல்லூரிக்கு சரிவர செல்லாமலும், படிப்பில் ஆா்வமில்லாமலும் இருந்தாராம். இதை, மாரியப்பன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது தந்தையின் தலையில் கல்லை தூக்கிப்போட்டுவிட்டு தங்கபாண்டி தப்பினாராம். இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தாா்.

இத்தகவலறிந்த மேலப்பாளையம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், கொலை வழக்குப் பதிந்து, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பதுக்கியிருந்த தங்கபாண்டியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

‘பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவா்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்வி,... மேலும் பார்க்க

‘மீன் வளா்ப்புக்கு உள்ளீட்டு மானியம் பெறலாம்’

திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி எம்.பி. கடிதம்

ஈரானில் தவிக்கும் இடிந்தகரை பகுதி மீனவா்களை விரைந்து மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு , திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம... மேலும் பார்க்க

நயினாா்குளம் கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி நயினாா்குளம் பிரிவு கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நயினாா்குளம் பிரிவு கால்வாயில் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரியின் சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத் துறை சாா்பில் நட... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் மோனிகா ராணா

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக மோனிகா ராணா புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளதையடுத்து, கோப... மேலும் பார்க்க