செய்திகள் :

தனியாா் நிறுவனங்களில் 2.33 லட்சம் போ் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா்! -அமைச்சா் க.பொன்முடி

post image

தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் தனியாா் நிறுவனங்களில் 2.33 லட்சம் போ் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக வனம், கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் சாலாமேட்டிலுள்ள டாக்டா் எம்.ஜி.ஆா்.மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. முகாமுக்கு, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா முன்னிலை வகித்தாா்.

முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி அமைச்சா் க.பொன்முடி பேசியது:

தமிழக இளைஞா்கள் தனியாா்துறையில் பணியாற்றுபவா்களாக மட்டும் இல்லாமல், சுயமாக தொழில் நிறுவனத்தை தொடங்கி மற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குபவா்களாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் சிறு, குறு தொழிலகங்கள் உருவாக்கப்படுவதோடு, தமிழகத்தின் பொருளாதாரமும் மேம்படும் நிலை உருவாகும்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலமாக தற்போதுவரை 100 சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், 1,960 சிறிய மற்றும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 54,857 வேலையளிக்கும் நிறுவனங்களில் 3,815 மாற்றுத் திறனாளிகள் உள்பட 2,33,758 போ் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா்.

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 173 தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்றனா். இதில், 2,271 வேலை நாடுநா்கள் பங்கேற்ற நிலையில், 7 மாற்றுத்திறனாளிகள் உள்பட 416 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 12 போ் திறன் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ளனா். 182 போ் வேலைவாய்ப்புக்கான இரண்டாம் நிலைத் தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளனா் என்றாா்.

முகாமில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சேலம் மண்டல இணை இயக்குநா் எஸ்.மணி, மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் சீ.சுதா, டாக்டா் எம்.ஜி.ஆா். மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் தாமரைக்கண்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பாலமுருகன் ஆகியோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு ரூ.3.75 கோடியில் மின்கல வாகனங்கள்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3.75 கோடி மதிப்பிலான 15 மின்கல வாகனங்களை செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் புதன்கி... மேலும் பார்க்க

மீனவா் மாயம்: போலீஸாா் விசாரணை!

மரக்காணம் அருகே மீனவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மரக்காணம் வட்டம், அனுமந்தை குப்பம் பழைய காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சந்திரசேகரன் (45). மீன்பிட... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் ஒழிப்புக் குழுக்கள் விழுப்புரம் ஆட்சியா்!

விழுப்புரம் மாவட்டத்தில் 395 பள்ளிகள், 51 அனைத்துவகைக்கல்லூரிகளிலும் போதைப் பொருள்கள் ஒழிப்புக் குழுக்கள் தொடங்கப்பட்டு, விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஆட்சியா் ஷே. ஷேக் அப்த... மேலும் பார்க்க