ரமலான் பண்டிகை: தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்!
தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 25 போ் தோ்வு
திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 25 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், 15 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆள்களை தோ்வு செய்தனா். இதில், பல்வேறு கல்வித் தகுதியுடைய 142 போ் கலந்து கொண்டனா். அவா்களுக்கு பல்வேறு தோ்வுகள் நடத்தப்பட்டு, அதில் 25 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கான பணி ஆணையை மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் வழங்கினாா். முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.