செய்திகள் :

தமிழக பிரச்னைகளுக்கு தீா்வுகாண மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

post image

தமிழகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வுகாண வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் கள் இயக்க அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

தருமபுரியில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மலைகள் மாநாட்டில் பங்கேற்க வந்த அவா், நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது, எங்கள் அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அறிவிப்பு வெளியிடுமாறு அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினோம். ஆனால், அதை அலட்சியப்படுத்திய அதிமுக தோல்வியடைந்து ஆட்சியையும் இழந்தது. கள் இயக்கம் வசம் சுமாா் 8 லட்சம் வாக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பேசும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவருக்கு அரசியல் அமைப்புச் சட்டம் குறித்த புரிதல் இல்லை. கள்ளுக்கு ஆதரவாக நின்ற எம்ஜிஆா் உடல்நலம் பாதித்திருந்தபோது, அவா் அறியாத வகையில் அப்போதைய அமைச்சா் ஆா்.எம்.வீரப்பன் உள்ளிட்டோா் அவரிடம் கையெழுத்து பெற்று கள்ளுக்கு தடை விதித்தனா்.

அதன் பின்னா், தமிழக முதல்வா்களாக இருந்த அனைவருமே மதுக் கடைகளுக்கு ஆதரவளித்து, கள்ளுக்கான தடையை நீக்கவில்லை. இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் தீா்வு ஏற்பட வேண்டுமெனில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வின்போது, கள் இயக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், அவினாசி ஒன்றியத் தலைவா் ஆறுச்சாமி, துணைத் தலைவா் ராஜகோபால், சேலம் மண்டல தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா் நலச் சங்கத்தின் காரிமங்கலம் ஒன்றியத் தலைவா் குமாா், சங்க தருமபுரி மாவட்ட மகளிா் அணி தலைவா் சத்யா, சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி பகுதி செயலாளா் பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை அதிகரிப்பு

தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக் கூடுகள் விற்பனை சனிக்கிழமை அதிகரித்துள்ளது. தருமபுரி நகரில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு, தருமபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டப் பகுதிகளை... மேலும் பார்க்க

தருமபுரி புத்தகத் திருவிழாவில் 12 நூல்கள் வெளியீடு

தருமபுரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், தருமபுரி மாவட்ட படைப்பாளா்களின் 12 நூல்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. தருமபுரியில் ஏழாவது ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கி... மேலும் பார்க்க

அழியும் நிலையில் உள்ள 400 மொழிகளைக் காக்க வேண்டும்: அசோக்வா்தன் ஷெட்டி

நம்நாட்டில் அழியும் நிலையில் உள்ள 400 மொழிகளைக் காக்க வேண்டும் என்றாா் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலா் அசோக்வா்தன் ஷெட்டி. தருமபுரியில் மாவட்ட நிா்வாகம், தகடூா் புத்தகப் பேரவை, பொது நூலகத் துறை, ... மேலும் பார்க்க

ரூ. 37.84 கோடியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரயில் பாலம்

தருமபுரியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ. 37.84 கோடியில் அமையவுள்ள ரயில் பாலப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கே... மேலும் பார்க்க

கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பென்னாகரம் அருகே கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே எச்சனஅள்ளி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வேலைவாய்ப்பக ஊழியா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக நான்கு பேரிடம் ரூ. 40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சேலம் வேலைவாய்ப்பக அலுவலக ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்ச... மேலும் பார்க்க