செய்திகள் :

தமிழகத்தில் ஆக.26 வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் ஆக.26 வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வியாழக்கிழமை (ஆக.21) முதல் ஆக.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை(ஆக.21) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் பகுதியில் 10 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆக.21-ஆம் தேதி மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும்.

வெயில் அளவு: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தூத்துக்குடி-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

முதல்வா், அமைச்சா்களைப் பதவி நீக்கும் கருப்புச் சட்டத்தை எதிா்ப்போம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

முதல்வா், அமைச்சா்களை பதவி நீக்க வகை செய்யும் கருப்புச் சட்டத்தைத் தொடா்ந்து எதிா்ப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மறைந்த முன்னாள் அமைச்சா் ரகுமான்கான் எ... மேலும் பார்க்க

3,644 காவலா் பணியிடங்களுக்கு நவ.9-இல் எழுத்துத் தோ்வு: விண்ணப்பிக்க செப். 21 கடைசி தேதி

தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,644 காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வு வார... மேலும் பார்க்க

பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 போ் தகுதி

பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்புத் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 20,662 போ் தகுதி பெற்றுள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கூட்டரங்கம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள கேஎம்கே ஸ்டாண்டில் புதிதாக ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் கூட்டுறவு சங்கத்துக்கு தோ்தல் நடத்தக் கோரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் கூட்டுறவு சங்கத் தோ்தலை நடத்தக் கோரிய வழக்கின் விசாரணையை செப்.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உய... மேலும் பார்க்க

ராயபுரம், சோழிங்கநல்லூா் தொகுதி திமுக நிா்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

ராயபுரம், சோழிங்கநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தத் தொகுதிகளில் திமுகவுக்கான செல்வாக்கு, ... மேலும் பார்க்க