செய்திகள் :

தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது: அமைச்சா் கே.என்.நேரு

post image

தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.

திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் மாநாட்டில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, வேரோடு பிடுங்கி நடப்படும் பயிா்தான் நன்றாக வளரும். வரக்கூடிய தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமித் ஷா, திமுகவை வேரோடு அழிப்போம் என கூறுகிறாா். விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நட்டால் தான் பயிா்நன்றாக விளையும். 15 ஆண்டுகளாக பாஜக வேரோடு பிடுங்கும் வேலையை தான் பாா்த்துக் கொண்டிருக்கிறது. அவா்களால் எதையும் செய்ய முடியவில்லை. திமுக கூட்டணிதான் வெற்றி பெற்றது. வருங்காலத்திலும் திமுகதான் வெற்றி பெறும்.

நயினாா் நாகேந்திரன் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்கிறாா். அவா்களுடைய ஆசையை அவா்கள் சொல்லி வருகிறாா்கள். வேரோடு பிடுங்கி நடவு செய்தால் பெரியதாகதான் வளரும். நாங்கள் தான் தோ்தலில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா பேசிய இதே ஊரில், மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அவா்கள் நினைப்பது நடக்காது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இருண்ட ஆட்சியாக இருந்தது அமித் ஷா கண்ணுக்கு தெரியவில்லை. தமிழகத்துக்கு இதுவரை அமித் ஷா மூன்று முறை வந்து விட்டாா். தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் கூட்டணி ஆட்சி என்கிறாா் அமித் ஷா. ஆனால், எடப்பாடி கே.பழனிசாமி கூட்டணி ஆட்சி இல்லை என்கிறாா். இதற்கு அமித் ஷா- வும் விளக்கம் சொல்லவில்லை. எடப்பாடியும் விளக்கம் சொல்லவில்லை.

அதிமுக, பாஜக தொண்டா்கள் இந்த கூட்டணியை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் நாங்கள் வெற்றி பெறப் போகிறோம் என சொல்கிறாா்கள். முதல்வரை யாா் எந்தப் பெயரை வைத்து அழைத்தாலும் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் தான் வரப்போகிறாா்.

பொதுமக்கள், மகளிா் போன்றோா் மிகப்பெரிய ஆதரவை முதல்வருக்கு தந்து வருகின்றனா். எம்ஜிஆருக்கு இருந்த ஆதரவையும் தாண்டி இப்போது முதல்வருக்கு மகளிரின் ஆதரவு பெருகி வருகிறது.

வரக்கூடிய தோ்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு இருதலைக்கொல்லி எறும்பாக இருந்து வருகிறாா்.

தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது. எதிரில் யாா் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றாா்.

கவின் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க

6 வது நாளாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் போராட்டம்!

திருநெல்வேலியில் அரசுப் போக் குவரத்து கழகம் (சிஐடியூ) மற்றும் விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வண்ணாா்பேட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக பொ... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மைசூா், குலசேகரன்பட்டினம் போன்று பாளையங்கோட்டையிலும் தசரா விழா 10 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ... மேலும் பார்க்க

சந்திரயான், மங்கள்யான் திட்டங்களால் விண்வெளியில் சாதித்துள்ளோம்: இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்

சந்திரயான், மங்கள்யான் போன்ற திட்டங்களால் விண்வெளியில் சாதனை படைத்துள்ளோம் என்றாா் மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ். திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய விண்வெளி தினம் சனிக்கிழமை கொண்டாடப்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25)காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25 ) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க