செய்திகள் :

தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் யாா்? தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

post image

தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப் பேரவை கூடுதல் செயலா் பி.சுப்பிரமணியம், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை துணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா். மேலும், இத் தோ்தலில் போட்டியிட 2 நாள்களைத் தவிர ஜூன் 9 வரை மனுதாக்கல் செய்யலாம் எனவும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்தல் அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு ஜூன் 9 கடைசி நாளாகும். தேவைப்படும் பட்சத்தில் வாக்குப் பதிவு ஜூன் 19-இல் நடைபெறும்.

தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தோ்தலை நடத்தும் அதிகாரியாக சட்டப் பேரவை கூடுதல் செயலா் பி.சுப்பிரமணியம், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை துணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். வேட்புமனு தாக்கல் ஜூன் 2 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பக்ரீத் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் ஜூன் 7, 8 ஆகிய தினங்களில் மட்டும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. பிற நாள்களில் மனுதாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு தேவைப்பட்டால் சட்டப்பேரவை குழுக்கள் அறையில் வாக்குப் பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டு ஜூன் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளாா்.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க